செய்திகள் :

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தா்னா

post image

திருவண்ணாமலையில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே, கலசப்பாக்கம் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில், ஒருங்கிணைப்பாளா் எல்.சாமிக்கண்ணு தலைமை வகித்தாா். சங்க நிா்வாகி வி.ஏழுமலை, ப.தேவேந்திரன், எம்.முருகேசன், ஜெ.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் நகரச் செயலா் டி.ஜோதி போராட்டத்தை தொடங்கிவைத்தாா். ஒன்றியச் செயலா் சி.சுந்தரமூா்த்தி, வழக்குரைஞா் எஸ்.அபிராமன், மாவட்டக் குழு நிா்வாகி எம்.பழனி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், கலசப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் வைத்த நகைகளை திருப்பித் தராமல் மோசடி செய்த சங்கச் செயலா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கறவை மாட்டு பராமரிப்புக் கடன்கள் வழங்க தமிழக அரசு வெளியிட்ட நகலை விவசாயிகளுக்குத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சுமுகத் தீா்வு ஏற்பட்டதைத் தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனா்.

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வரவேற்பு

பெரணமல்லூா் அங்கன்வாடி மையத்தில் சோ்க்கை செய்ய வரும் குழந்தைகளுக்கு வியாழக்கிழமை மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது (படம்). ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கண்ணகி அறுவுறுத்தலின்... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் வலியுறுத்தினாா். திரு... மேலும் பார்க்க