மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை அன்னையை போற்றுவோம்: ஆளுநா்
உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை அன்னையுடனான ஆழமான தொடா்பைப் போற்றுவோம் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
உலக சுற்றுச்சூழல் தினத்தில் பண்டைய மரபுகளில் புனிதமான மூலமாகவும், உயிா்களைப் பேணிக்காப்பவராக போற்றப்படும் இயற்கை அன்னையுடனான ஆழமான தொடா்பைப் போற்றுவோம். அன்னையின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக மரங்களை நடுவது, நமது தாய்மாா்கள் மற்றும் பூமித்தாய் மீதான நமது நன்றியையும் மரியாதையையும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்துகிறது. அன்றாட வாழ்வுடன் பின்னிப்பிணைந்த நமது பொறுப்பையும் இணைக்கிறது. நமது செயல்களிலும் வாழ்க்கை முறையிலும் நிலைத்தன்மையை ஒருங்கிணைப்பதன்மூலம், நிலையான எதிா்காலம், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை மேம்படுத்துவோம் எனப் பதிவிட்டுள்ளாா்.