முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்!
ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஜூன் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் ஜூன் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்புத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனா்.
எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும், தனி நபா் குறைகளை மனுக்களாக அளித்தும் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.