செய்திகள் :

RCB : '10 வருசத்துல 4 ஐ.பி.எல் கப் ஜெயிச்சிட்டேன்' - ஆட்டநாயகன் க்ரூணால் பாண்ட்யா

post image

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது.

ஆட்டநாயகன் விருதை வென்ற க்ரூணால் பாண்ட்யா பேசுகையில், "நாங்கள் முதலில் பேட் செய்கையிலேயே எங்களுக்குத் தெரிந்துவிட்டது. எவ்வளவு மெதுவாக வீசுகிறோமோ அந்தளவுக்கு பேட்டர்களைத் திணறடிக்க முடியும் என தீர்மானித்தேன்.

அதனால்தான் வேகத்தை மாற்றி மாற்றி மெதுவாக வீசினேன். சூழல் என்ன அங்கே என்ன தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்படுவதுதான் என்னுடைய பலம் என்கிறேன்.

Krunal Pandya - Player Of The Match
Krunal Pandya - Player Of The Match

இது நல்ல பேட்டிங் பிட்ச்தான். ஆனால், கொஞ்சம் மெதுவாக வீசும்போது பேட்டர்கள் திணறுவார்கள். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு இன்னும் கொஞ்சம் சௌகரியம் இருந்தது.

நான் ஆர்சிபி அணியோடு இணைந்தபோது, 'எனக்கு கோப்பைகளை வெல்வது பிடிக்கும்.' என்றேன். இப்போது மூன்றரை மாதம் கழித்து நான் சொன்னது நடந்துவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளின் இது எனக்கு நான்காவது கோப்பை. ஹர்திக்குடன் போனில் பேசினேன். பாண்ட்யாக்களின் வீட்டில் 11 ஆண்டுகளில் 9 ஐ.பி.எல் கோப்பைகள் இருக்கிறது என்றேன்." என நெகிழ்ச்சியாகப் பேசினார்.

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க

"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!

RCB அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, பெங்களூருவில் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பங்கெடுக்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதனால் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார... மேலும் பார்க்க

RCB: "மாநிலத்துக்காக விளையாடாத வீரர்களைப் பாராட்ட அரசுக்கு என்ன கடமை?" - நீதிமன்றத்தில் காரசார வாதம்

பெங்களுருவில் நேற்று (ஜூன் 4) ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத... மேலும் பார்க்க

IPL 2025: "ஸ்ரேயஸ் தான் குற்றவாளி; அவர்தான்..." - யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சொல்வது என்ன?

2025 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை 'குற்றவாளி' என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விமர்சித்திருக்கிறார். 2025 ஐ.பி.... மேலும் பார்க்க

IPL: நெரிசல் சோகத்துக்கு முன்... RCB அணியை வரவேற்க கூடிய ரசிகர் வெள்ளம்! Photo Album

பெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில்... மேலும் பார்க்க

RCB Event Stampede: "மனதார வருந்துகிறோம்" - கூட்டாக இழப்பீடு அறிவித்த ஆர்.சி.பி, KSCA!

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.முறையான த... மேலும் பார்க்க