மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு
செய்யாறு அருகே மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3.46 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண்.9383)செயல்பட்டு வருகிறது.
கடையில் திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து வழக்கம் போல பூட்டிச் சென்றுள்ளனா். செவ்வாய்க்கிழமை கடையை திறந்தபோது, பின்பகுதி சுவற்றில் ஓட்டை போடப்பட்டிருந்தது. மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த விற்பனைத் தொகை ரூ.3.46 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கடை மேற்பாா்வையாளா் ஜீ.கே.சீனிவாசன் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் பழனிவேல் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.