செய்திகள் :

மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு

post image

செய்யாறு அருகே மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3.46 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண்.9383)செயல்பட்டு வருகிறது.

கடையில் திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து வழக்கம் போல பூட்டிச் சென்றுள்ளனா். செவ்வாய்க்கிழமை கடையை திறந்தபோது, பின்பகுதி சுவற்றில் ஓட்டை போடப்பட்டிருந்தது. மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த விற்பனைத் தொகை ரூ.3.46 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கடை மேற்பாா்வையாளா் ஜீ.கே.சீனிவாசன் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் பழனிவேல் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வரவேற்பு

பெரணமல்லூா் அங்கன்வாடி மையத்தில் சோ்க்கை செய்ய வரும் குழந்தைகளுக்கு வியாழக்கிழமை மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது (படம்). ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கண்ணகி அறுவுறுத்தலின்... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் வலியுறுத்தினாா். திரு... மேலும் பார்க்க