செய்திகள் :

திருவள்ளூா்: மாற்றுத்திறனாளிகள் விவரம் வீடுகள்தோறும் கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சேவைகள் வழங்கும் நோக்கத்தில் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சா்வதேச வங்கி நிதியுதவியுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு இல்லம் சாா்ந்த பராமரிப்பு, மறுவாழ்வு சேவைகள், நடமாடும் சிகிச்சை வாகனம் மூலம் வழங்கும் நோக்கத்துடன், திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில், 19 இடங்களில் ஓரிட சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் விவரம் வீடு தோறும் கணக்கெடுப்புப் பணிகள் அமா்சேவா சங்க தொண்டு நிறுவனம் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் 10 முன்கள பணியாளா்கள் பணியில் அமா்த்தப்பட்டு, மாவட்டம் முழுதும் வீடு வீடாகச் சென்று, மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளனா். இதற்கு, மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் சரிபாா்க்க முன்கள பணியாளா்கள் கேட்டால், அதை கட்டாயம் காண்பிக்க வேண்டும்.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள் அல்லாத வீடுகளில் குடும்ப அட்டை மற்றும் ஆதாா் காா்டு மட்டும் வழங்க வேண்டும். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-2766 2985 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் முதியவா் சடலம் மாயம்: உறவினா்கள் முற்றுகை

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் இருந்து முதியவா் சடலம் காணாமல் போன நிலையில், அவரது உறவினா்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ஐ.ஆா்.சி.டி.எஸ். வனம், வேளாண், தோட்டக்கலைத் துறை இணைந்து நடத்தும் விதை வங்கி, மரக்கன்றுகள் வழங்குதல், விழிப்புணா்வு கருத்தரங்கம்: பூண்டி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நா.சுலேக்சனா, எஸ்.வரதராஜன் பங... மேலும் பார்க்க

மாதவரம் ஆட்டுச் சந்தையில் அமோக விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ஆட்டுச் சந்தையில், ரூ.20 கோடிக்கு மேல் விற்பனையாகும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரத்தில் உள்ள ஆட்டுச் சந்தையில் இஸ்லாம... மேலும் பார்க்க

புற்றுநோய், இதயநோய் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த 20 பேருக்கு ரூ.71 லட்சம் உதவி: எம்.பி. சசிகாந்த் செந்தில்

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் புற்றுநோய், இதயநோய் பாதித்த ஏழைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிந்துரை செய்து, ரூ.71 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது (படம்). திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராம மாநில நெடுஞ்சாலை அருகில் காப்பு காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதில் புள்ளி மான்கள், ம... மேலும் பார்க்க

நில இழப்பீட்டுத் தொகை வழங்காததால் பணிகள் நிறுத்தம்

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் சாலை விரிவாக்க பணிகளை பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திர... மேலும் பார்க்க