புற்றுநோய், இதயநோய் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த 20 பேருக்கு ரூ.71 லட்சம் உதவி: எம்.பி. சசிகாந்த் செந்தில்
திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் புற்றுநோய், இதயநோய் பாதித்த ஏழைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிந்துரை செய்து, ரூ.71 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் அவா் கூறியதாவது:
திருவள்ளூா் மக்களவை தொகுதியில் கடந்த ஓராண்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் தொகுதி முழுவதும் 41 இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், 444 அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் நூலகங்களுக்கு புத்தகங்கள், திருவேற்காடு நகராட்சி 14-ஆவது வாா்டு, ஆவடி 34-ஆவது வாா்டில் நியாயவிலைக் கடைகள், 23 ஊராட்சிகளில் சூரிய மின் விளக்குகள், சோழவரம் வழுதிகைமேடு ஊராட்சி மற்றும் வெங்கல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கலையரங்க மேடை, பென்னலூா்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள், தோ்வாய் கண்டிகைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மக்களவை தொகுதியில் புற்றுநோய், இதய நோய் அறுவை சிகிச்சைக்கு மட்டும் கடந்த ஓராண்டில் 20 பேருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவா்களின் சிகிச்சைக்காக மட்டும் பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.71 லட்சம் பெற்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அவா் தெரிவித்தாா்.