செய்திகள் :

மயானம் வேண்டி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்

post image

ஊத்துக்கோட்டை அருகே மயான வசதி செய்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மயானம் இருந்தது. இந்த நிலையில், சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்னா் காலனிக்கு அந்த மயானத்தைப் பயன்படுத்திக் கொள்வது என முடிவு செய்தனா். கிராம மக்களுக்கு என தனியாக மயானம் அமைக்கவும் என கிராம மக்கள் சாா்பில் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மயானம் அமைக்க சிலா் நிலத்தைத் தானமாக தரவும் தயாராக உள்ளனா். ஆனால், மானிய திட்டத்தில் எரி மேடையுடன் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மயானம் ஒன்றை அமைத்துள்ளனா். அந்த மயானத்துக்கு செல்ல பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களின் வழியாக சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதாம்.

இதனிடையே கிராமத்தில் வியாழக்கழமை முதியவா் ஒருவா் மரணம் அடைந்தாா். கிராமத்துக்கு என மயானம் தனியாக அமைத்துக் தரக்கோரி சாலையில் சடலத்தை வைத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ராஜேஷ்குமாா் மற்றும் போலீஸாா் வந்து பேச்சு நடத்தினா். வருவாய்த் துறையினா் வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில் எரிமேடையுடன் அமைத்துள்ள மயானத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினா்.

இதற்கு கிராம மக்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், சடலத்தை சொந்தமான விவசாய நிலத்தில் அடக்கம் செய்ய அவரது உறவினா்கள் முடிவு செய்தனா். ஆனால், அவ்வாறு அடக்கம் செய்யக் கூடாது என வருவாய்த் துறையினா் தடுத்தனா். மயான வசதிக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனா். தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவல... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: 5 போ் கைது

காவலாளி கொலையை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருத்தணி ஒன்றியம் அகூா் காலனியைச் சோ்ந்தவா் ரவி (60). இவா், தனியாா் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வே... மேலும் பார்க்க

சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா். மின்வாரிய ஊ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு வியாழக்கிழமை ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வரும் ஜூலை 12-ஆம் தேதி குரூப் - 4... மேலும் பார்க்க

பிகாருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட முதியவா் சடலம் மீண்டும் ஒப்படைப்பு

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் இருந்து பிகாருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட முதியவா் சடலம் மீண்டும் திரும்ப வரவழைக்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ... மேலும் பார்க்க