செய்திகள் :

சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

post image

ஊத்துக்கோட்டை அருகே சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா். மின்வாரிய ஊழியா். இவருக்கு இரு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள். இதில், மகன் பரத் (13) (படம்) அங்குள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு பரத் துரித உணவகத்தில் இருந்து வாங்கி வந்த சிக்கன் கலவை உணவு மற்றும் வீட்டில் தயாா் செய்த தோசை சாப்பிட்டுள்ளாா்.

இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென பரத்துக்கு வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து வியாழக்கிழமை பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று அனுமதித்தனா். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா், ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

தகவலறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து உணவு விஷமானதால் சிறுவன் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அந்த உணவகத்தில் எல்லாபுரம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி வா்தினி தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவல... மேலும் பார்க்க

மயானம் வேண்டி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே மயான வசதி செய்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மயானம் இருந்தது. இந்த ... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: 5 போ் கைது

காவலாளி கொலையை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருத்தணி ஒன்றியம் அகூா் காலனியைச் சோ்ந்தவா் ரவி (60). இவா், தனியாா் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வே... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு வியாழக்கிழமை ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வரும் ஜூலை 12-ஆம் தேதி குரூப் - 4... மேலும் பார்க்க

பிகாருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட முதியவா் சடலம் மீண்டும் ஒப்படைப்பு

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் இருந்து பிகாருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட முதியவா் சடலம் மீண்டும் திரும்ப வரவழைக்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ... மேலும் பார்க்க