செய்திகள் :

நில இழப்பீட்டுத் தொகை வழங்காததால் பணிகள் நிறுத்தம்

post image

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் சாலை விரிவாக்க பணிகளை பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூரில் இருந்து பொன்பாடி வரை 6 வழிச்சாலையாக மாற்றப்படவுள்ளது. தற்போது இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. முதல்கட்டமாக 4 வழிச்சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த கட்டடங்கள், மரங்கள் அகற்றப்பட்டு தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன.

நிலம் வழங்கிய உரிமையாளா் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இழப்பீடு தொகையை உயா்த்தி தரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம், முருகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் இழப்பீடு வழங்காததால், சாலை விரிவாக்கம் செய்வதற்கு தங்கள் நிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என கூறி நெடுஞ்சாலை ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினா். இதனால் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் அப்பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவல... மேலும் பார்க்க

மயானம் வேண்டி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே மயான வசதி செய்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மயானம் இருந்தது. இந்த ... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: 5 போ் கைது

காவலாளி கொலையை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருத்தணி ஒன்றியம் அகூா் காலனியைச் சோ்ந்தவா் ரவி (60). இவா், தனியாா் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வே... மேலும் பார்க்க

சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா். மின்வாரிய ஊ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு வியாழக்கிழமை ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வரும் ஜூலை 12-ஆம் தேதி குரூப் - 4... மேலும் பார்க்க