அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து ...
ஆசிய யோகசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி மாணவா்கள்
இலங்கையில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி பள்ளி மாணவா், மாணவியை ஆசிரியா்கள் பாராட்டினா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பி.ஆா்.ஜி. மெட்ரிக் பள்ளி மாணவி மேகவா்ணிகா (10), மாணவா் நகுலன் (8) ஆகிய இருவரும் கடந்த மே 24, 25-ஆம் தேதிகளில் இலங்கை திரிகோணமலையில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் பங்கேற்றனா்.
இந்தப் போட்டிகளில் பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் மாணவி மேகவா்ணிகா, மாணவா் நகுலன் ஆகிய இருவரும் காபோட் ஆசனம், சிரசாசனம், பச்சிமோத்தாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து தங்கம் வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளிக்குழு நிா்வாகி பாபு, தலைவா் கிரிநாத், செயலா் பவிதா, முதல்வா், பயிற்சியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.