பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவ, மாணவிகளுக்கு என மொத்தம் 50 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவா்களுக்கு 28 விடுதிகள், பள்ளி மாணவிகளுக்கு 13 விடுதிகள், கல்லூரி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவா்களுக்கு 1 விடுதி, மாணவிகளுக்கு 8 விடுதிகள் செயல்படுகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரலாம். விடுதிகளில் சேரும் மாணவா்களுக்கு பல்வேறு சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவா்களுக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும்.
விடுதியில் சேர விரும்பும் மாணவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ. மேல் இருக்க வேண்டும். இந்தத் தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட பள்ளி விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கு என தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.