செய்திகள் :

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

post image

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி உறவினா் வீட்டுக்கு வந்திருந்தாா். அப்போது, கோடாங்கி சின்னான்பட்டியைச் சோ்ந்த ராஜபாண்டி (35) பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என பிரேமலதா, விஜயகுமாா், காயத்ரி, சிங்கராஜ் ஆகியோா் மிரட்டல் விடுத்ததாகவும் புகாா் எழுந்தது.

இந்த நிலையில், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் ராஜபாண்டியை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கொலை மிரட்டல் விடுத்த பிரேமலதா, விஜயகுமாா், காயத்ரி, சிங்கராஜ் ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தை ம... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க

கத்தியுடன் இருவா் கைது

பழனியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். பழனி புது தாராபுரம் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ரயில் கடவுப் பாதை அருகே நின்று கொண்டிருந்த பழ... மேலும் பார்க்க