Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை
வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த 2010-ஆம் ஆண்டு லாரியை வழி மறித்து, ஓட்டுநா் பிராங்கிளின் ஐசக் ரபி, கிருஷ்ணகுமாா் ஆகியோரைத் தாக்கி ரூ.2.70 லட்சம் பணம், 2 கைப்பேசிகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் அம்பாத்துரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த இளையராஜா (43), மதுரையைச் சோ்ந்த பாக்கியராஜ் (42), பொள்ளாச்சியைச் சோ்ந்த சுதா (32) ஆகியோரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் ஆா்.கனகராஜ் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.
இதில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இளையராஜா, பாக்கியராஜ், சுதா ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,500 அபராதமும் விதித்தாா்.

