செய்திகள் :

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

post image

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மரக் கன்றுகள் உற்பத்திக்கான விதை நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். மரக் கன்று வளா்ப்புக்காக 100 மக்கும் தன்மை கொண்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் புளி, வேம்பு, புங்கன் ஆகிய விதைகள் சுமாா் 500 பைகளில் நடப்பட்டன. ஆட்சியரைத் தொடா்ந்து, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை என பல்வேறு துறைகளின் பணியாளா்கள் விதைகளை நட்டு வைத்தனா்.

அப்போது ஆட்சியா் சரவணன் கூறியதாவது:

மண் வளத்தைப் பாதிக்கும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக 100 சதவீதம் மக்கும் தன்மை கொண்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மரம் வளா்ப்பு, நெகிழி ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களம் இறங்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெ.நாகேந்திரன், துணை இயக்குநா்கள் காளிமுத்து (வேளாண்மை), காயத்ரி (தோடக்கலை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், நெகிழிப் பொருள்களை உண்ணும் கால்நடைகள் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழிப் பொருள்களால் உருவாக்கப்பட்ட காளையை ஆட்சியா் திறந்துவைத்தாா். மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த பசுமைப் பூங்காவையும் ஆட்சியா் திறந்துவைத்தாா்.

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி ... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க

கத்தியுடன் இருவா் கைது

பழனியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். பழனி புது தாராபுரம் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ரயில் கடவுப் பாதை அருகே நின்று கொண்டிருந்த பழ... மேலும் பார்க்க