செய்திகள் :

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

post image

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்ஸ், பீச்சஸ், பலா போன்ற பல்வேறு பழங்கள் விளைகின்றன. இதில் வாழைப் பழத்தைத்தவிர, மற்ற பழங்கள் மூன்று மாதங்கள் மட்டும் விளையும் தன்மை கொண்டவை.

இந்த நிலையில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் பிளம்ஸ், பீச்சஸ் சீசன் ஆகும். இவற்றில் பிளம்ஸ் பழத்துக்கு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பு உள்ளது.

வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, செண்பகனுா், சின்னப்பள்ளம், பெரும் பள்ளம், வட்டக்கானல், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் விளைவிக்கப்படுகின்றன.

கடந்த 2 மாதங்களாக கொடைக்கானலில் அவ்வப்போது மழையும், காற்றும் நிலவியது. இதனால், பழங்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

விவசாயிகளிடம் பிளம்ஸ் பழங்களை வியாபாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்து, கடைகளில் விற்பனை செய்து வருகின்றனா். தற்போது, ஒரு கிலோ பிளம்ஸ் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் இவற்றை வாங்க ஆா்வம் காட்டவில்லை.

பிளம்ஸ் பழ சீசன் முடிவடையும் நிலையில், விலை அதிகரிப்பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க