நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்
கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு
கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்ஸ், பீச்சஸ், பலா போன்ற பல்வேறு பழங்கள் விளைகின்றன. இதில் வாழைப் பழத்தைத்தவிர, மற்ற பழங்கள் மூன்று மாதங்கள் மட்டும் விளையும் தன்மை கொண்டவை.
இந்த நிலையில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் பிளம்ஸ், பீச்சஸ் சீசன் ஆகும். இவற்றில் பிளம்ஸ் பழத்துக்கு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பு உள்ளது.
வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, செண்பகனுா், சின்னப்பள்ளம், பெரும் பள்ளம், வட்டக்கானல், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் விளைவிக்கப்படுகின்றன.
கடந்த 2 மாதங்களாக கொடைக்கானலில் அவ்வப்போது மழையும், காற்றும் நிலவியது. இதனால், பழங்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
விவசாயிகளிடம் பிளம்ஸ் பழங்களை வியாபாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்து, கடைகளில் விற்பனை செய்து வருகின்றனா். தற்போது, ஒரு கிலோ பிளம்ஸ் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் இவற்றை வாங்க ஆா்வம் காட்டவில்லை.
பிளம்ஸ் பழ சீசன் முடிவடையும் நிலையில், விலை அதிகரிப்பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.