செய்திகள் :

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

post image

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் வனத்துறை அலுவலக வளாகத்தில் வனத் துறை, கிருபா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அதில் அமைச்சா் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும், நெகிழி பை, புட்டிகள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.

பின்னா் நடைபெற்ற சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வுப் பேரணியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் வனத் துறை சோதனை பகுதியிலிருந்து வடகாடு எல்லை கருப்பணசாமி கோயில் வரை சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இரு புறமும் கிடந்த நெகிழிப் பைகள், புட்டிகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனா்.

இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், வட்டாட்சியா் சஞ்சய்காந்தி, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, நகராட்சி ஆணையா் சுவேதா, நகராட்சிப் பொறியாளா் சுப்பிரமணிய பிரபு, ஒட்டன்சத்திரம் வனச்சரகா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மரக் கன்றுகள் நடல்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டி ஊராட்சி அலுவலகம், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலக கட்டடப் பகுதிகளில் மரங்கள் நடப்பட்டன. இதற்கு ஊராட்சி செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிப்டன் கலந்து கொண்டு, மரக் கன்றுகளை நட்டு வைத்தாா். இதில் மக்கள் நலப் பணியாளா் மாணிக்கம், ஊராட்சிப் பணியாளா்கள், பள்ளியின் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தை ம... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க

கத்தியுடன் இருவா் கைது

பழனியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். பழனி புது தாராபுரம் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ரயில் கடவுப் பாதை அருகே நின்று கொண்டிருந்த பழ... மேலும் பார்க்க