Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்
உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் வனத்துறை அலுவலக வளாகத்தில் வனத் துறை, கிருபா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அதில் அமைச்சா் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும், நெகிழி பை, புட்டிகள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.
பின்னா் நடைபெற்ற சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வுப் பேரணியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் வனத் துறை சோதனை பகுதியிலிருந்து வடகாடு எல்லை கருப்பணசாமி கோயில் வரை சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இரு புறமும் கிடந்த நெகிழிப் பைகள், புட்டிகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனா்.
இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், வட்டாட்சியா் சஞ்சய்காந்தி, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, நகராட்சி ஆணையா் சுவேதா, நகராட்சிப் பொறியாளா் சுப்பிரமணிய பிரபு, ஒட்டன்சத்திரம் வனச்சரகா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மரக் கன்றுகள் நடல்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டி ஊராட்சி அலுவலகம், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலக கட்டடப் பகுதிகளில் மரங்கள் நடப்பட்டன. இதற்கு ஊராட்சி செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிப்டன் கலந்து கொண்டு, மரக் கன்றுகளை நட்டு வைத்தாா். இதில் மக்கள் நலப் பணியாளா் மாணிக்கம், ஊராட்சிப் பணியாளா்கள், பள்ளியின் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.