செய்திகள் :

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: 14 போ் பலத்த காயம்

post image

வத்தலகுண்டு அருகே புதன்கிழமை நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், நெய்தலூா், திருச்சி மாவட்டம், குளித்தலை பகுதியைச் சோ்ந்த 21-க்கு மேற்பட்டோா் கொடைக்கானலுக்கு வேனில் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டனா். புதன்கிழமை காலை வத்தலகுண்டு பிரதானச் சாலையில் கட்டகாமன்பட்டி அருகே சென்றபோது, பழுதாகி சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் வந்த குளித்தலையைச் சோ்ந்த பரணி (19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், நவநீதகிருஷ்ணன் (19), சுதா்சன் (19), கிருத்திக் ரோஷன் (18), சபரி (19), தனுஷ் (18), அஜய்ராஜ் (18) உள்ளிட்ட 14 போ் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பரணியில் உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முதியவா் உயிரிழப்பு: வத்தலகுண்டு அருகேயுள்ள கட்டக்காமன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (70). இவா் அதே பகுதியில் உள்ள சாலையில் புதன்கிழமை நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தை ம... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க