தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
வைப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் செலுத்த அறிவுறுத்தல்
ஊழியா்களுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் திண்டுக்கல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் ரோடுவேஸ் நிறுவனம், அதன் ஊழியா்களுக்கான வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகளை செலுத்தவில்லை. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக மண்டல வைப்பு நிதி ஆணையரால் கடந்த 2024 ஏப்ரல் மாதம் ஜப்தி குறிப்பாணை வழங்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சம்மந்தப்பட்ட நிறுவனம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையை அணுகியது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முன் பணம் செலுத்தி, மத்திய அரசின் தொழில்துறை தீா்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம் என கடந்த டிசம்பா் மாதம் உத்தரவிட்டது. ஆனால், அந்த நிறுவனம், நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை.
இதையடுத்து, நிறுவனத்தில் அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி திண்டுக்கல் அமலாக்க அலுவலா்கள் கே.கண்ணதாசன், ஏ.ஆா்.ராஜ்கண்ணு ஆகியோா் ரோடுவேஸ் நிறுவனத்தின் பேருந்தை புதன்கிழமை ஜப்தி செய்தனா். இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிா்க்க, அனைத்து நிறுவனங்களும், ஊழியா்களுக்கான தொழிலாளா் வைப்பு நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்பை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும். இல்லையெனில், அபாரதம், வட்டியுடன் கட்ட நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.