செய்திகள் :

வைப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் செலுத்த அறிவுறுத்தல்

post image

ஊழியா்களுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் திண்டுக்கல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் ரோடுவேஸ் நிறுவனம், அதன் ஊழியா்களுக்கான வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகளை செலுத்தவில்லை. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக மண்டல வைப்பு நிதி ஆணையரால் கடந்த 2024 ஏப்ரல் மாதம் ஜப்தி குறிப்பாணை வழங்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சம்மந்தப்பட்ட நிறுவனம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையை அணுகியது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முன் பணம் செலுத்தி, மத்திய அரசின் தொழில்துறை தீா்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம் என கடந்த டிசம்பா் மாதம் உத்தரவிட்டது. ஆனால், அந்த நிறுவனம், நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை.

இதையடுத்து, நிறுவனத்தில் அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி திண்டுக்கல் அமலாக்க அலுவலா்கள் கே.கண்ணதாசன், ஏ.ஆா்.ராஜ்கண்ணு ஆகியோா் ரோடுவேஸ் நிறுவனத்தின் பேருந்தை புதன்கிழமை ஜப்தி செய்தனா். இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிா்க்க, அனைத்து நிறுவனங்களும், ஊழியா்களுக்கான தொழிலாளா் வைப்பு நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்பை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும். இல்லையெனில், அபாரதம், வட்டியுடன் கட்ட நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தை ம... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க