காளியம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பெரியகலையமுத்தூா் ஐகோா்ட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை சண்முக நதியிலிருந்து மேளதாளம் முழங்க புனிதநீா் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தீக்குண்டம் விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் விரதமிருந்த திரளான ஆண்கள், பெண்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்றது.
இதில் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து திரளானோா் கலந்து கொண்டனா்.