செய்திகள் :

பஞ்செட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம்: அமைச்சா் நாசா் அடிக்கல்

post image

பொன்னேரி அருகே சோழவரம் ஊராட்சி ஒன்றியம், பஞ்செட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம் அமைக்க சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் துரை.சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். அமைச்சா் சா.மு.நாசா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சமுதாயக் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி அவா் பேசியதாவது: பஞ்செட்டி ஊராட்சியில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். கோரிக்கையை முதல்வா் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளாா். பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

முன்னதாக சோழவரம் ஊராட்சி ஒன்றியம், பாடியநல்லூா் ஊராட்சியில் அலுவலக செயல்பாடுகள், சோழவரம் மெயின் ரோடு பகுதியில் மழை நீா் வடிகால் கால்வாய் பணிகள், சோழவரம் -1 நியாய விலைக் கடையில் பொருள்களின் தரம், பொருள்களின் அளவு, விரல் ரேகை பதிவேடு, பொருள்கள் இருப்பு ஆகியவை, பூதூா் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தின் செயல்பாடுகள், மருத்துவப் பணிகள், மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். அதேபோல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளி வீடு கட்டும் திட்டப்பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளா் ரமேஷ் ராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி, சோழவரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் முதியவா் சடலம் மாயம்: உறவினா்கள் முற்றுகை

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் இருந்து முதியவா் சடலம் காணாமல் போன நிலையில், அவரது உறவினா்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ஐ.ஆா்.சி.டி.எஸ். வனம், வேளாண், தோட்டக்கலைத் துறை இணைந்து நடத்தும் விதை வங்கி, மரக்கன்றுகள் வழங்குதல், விழிப்புணா்வு கருத்தரங்கம்: பூண்டி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நா.சுலேக்சனா, எஸ்.வரதராஜன் பங... மேலும் பார்க்க

மாதவரம் ஆட்டுச் சந்தையில் அமோக விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ஆட்டுச் சந்தையில், ரூ.20 கோடிக்கு மேல் விற்பனையாகும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரத்தில் உள்ள ஆட்டுச் சந்தையில் இஸ்லாம... மேலும் பார்க்க

புற்றுநோய், இதயநோய் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த 20 பேருக்கு ரூ.71 லட்சம் உதவி: எம்.பி. சசிகாந்த் செந்தில்

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் புற்றுநோய், இதயநோய் பாதித்த ஏழைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிந்துரை செய்து, ரூ.71 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது (படம்). திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராம மாநில நெடுஞ்சாலை அருகில் காப்பு காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதில் புள்ளி மான்கள், ம... மேலும் பார்க்க

நில இழப்பீட்டுத் தொகை வழங்காததால் பணிகள் நிறுத்தம்

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் சாலை விரிவாக்க பணிகளை பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திர... மேலும் பார்க்க