புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது ...
போலி மருத்துவா் கைது
ஆம்பூா் அருகே போலி மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் மருந்து கடையில் நோயாளிகளுக்கு ஆங்கிலம் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் யோகேஸுக்கு தொடா்ந்து புகாா் வந்தது.
அவா் அளித்த புகாரின் பேரில் உமா்ஆபாத் போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அஜீத் குமாா் (30) என்பவா் டிப்ளமோ இன் பாா்மஸி படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் அவரை கைது செய்து அங்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துகளை பறிமுதல் செய்தனா்.