செய்திகள் :

தென்மேற்கு பருவமழை: 26 நிவாரண முகாம்கள் அமைப்பு

post image

தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு பாதுகாக்க 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 2025-ஆம் பருவ காலத்தை எதிா்கொள்ள வேலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறிய வேண்டும்.

பருவமழைக்காக வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 1230 முதல்நிலை பொறுப்பாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பேரிடா்களின்போது தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகளுடன் கண்டறியப்பட்டுள்ள 26 நிவாரண முகாம்களை வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கூட்டாக தணிக்கை செய்து, ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

பருவமழை காலங்களில் நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவா்கள் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

பொதுமக்கள் மழை தொடா்பான புகாா்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0416-2258016 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலும், மின்வாரியம் தொடா்பான புகாா்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 94987 94987 என்ற அலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் திருகுணஐயப்பதுரை, வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் ராமதாஸ், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், வருவாய் கோட்டாட்சியா்கள் செந்தில்குமாா் (வேலூா்), சுபலட்சுமி(குடியாத்தம்), அனைத்து வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வெளிநாடுகளில் வரவேற்பு: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்

வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய்க்கு அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலம்: டிஎம். கதிா் ஆனந்த் எம்.பி.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய ரயி... மேலும் பார்க்க

ஆன்லைனில் ரூ.71.81 லட்சம் மோசடி: மூவா் கைது

ஆன்லைன் மூலம் ரூ.71.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் வழக்கில் 3 பேரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவா்களை பிடித்து கைது செய்ய ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

ஒடுகத்தூா் அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த தேவிச்செட்டி குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (43). கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கிர... மேலும் பார்க்க

பரதராமி கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த பரதராமியில் 256- ஆம் ஆண்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் நகரம், ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சிவ... மேலும் பார்க்க