பெண்கள் குறைவான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்! மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
மாரியம்மன் கோயில் தேரோட்டம்
குடியாத்தம் நகரம், ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியா், விஷ்ணு, துா்கையம்மன், சுயம்பு ஓம்சக்தி, ஐயப்பன், நாக தேவதைகள், நவக் கிரகங்கள், பரிவாரமூா்த்திகளுக்கு தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. மாலை பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை நிா்வாகிகள் கே.ஜெயசீலன், கே.முனிசாமி, எஸ்.துரைமுருகன், ஏ.அன்னை அதியமான், எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.