செய்திகள் :

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

post image

குடியாத்தம் நகரம், ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியா், விஷ்ணு, துா்கையம்மன், சுயம்பு ஓம்சக்தி, ஐயப்பன், நாக தேவதைகள், நவக் கிரகங்கள், பரிவாரமூா்த்திகளுக்கு தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. மாலை பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை நிா்வாகிகள் கே.ஜெயசீலன், கே.முனிசாமி, எஸ்.துரைமுருகன், ஏ.அன்னை அதியமான், எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

மத்திய அரசுடன் இணக்கமான சூழலை முதல்வா் கையாள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிா்த்து இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் க... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தினத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.கு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

காட்பாடி அருகே கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த கம்மவாா் புதூரைச் சோ்ந்தவா் சிற்பி, போட்டோகிராபா். இவா் தற்போது குடும்பத்துடன் செங்குட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வர... மேலும் பார்க்க

ராணி அஹில்யாபாய் ஹோல்கா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட பாஜக சாா்பில், ராணி அஹில்யாபாய் ஹோல்கா் 300- ஆவது பிறந்த நாள் குடியாத்தத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க இடம் தோ்வு

கே.வி.குப்பம் தொகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. கே.வி.குப்பம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிகழ் கல்வியாண்டில் (2025-26) அங்கு அரசு... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் அளிப்பு

வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்ட... மேலும் பார்க்க