செய்திகள் :

தூத்துக்குடி: "குஜராத் உப்பு இறக்குமதிக்குத் தடை" - உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை; பின்னணி என்ன?

post image

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் உப்பு, இயற்கையாகவே அதிக வெண்மை நிறம் உடையது என்பதால் தூத்துக்குடி உப்பிற்குத் தனி மவுசு உண்டு.

தமிழகத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது.

இத்தொழிலில் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி உப்பளம்
தூத்துக்குடி உப்பளம்

இதில், ஆண்களை விடப் பெண் தொழிலாளர்களே அதிகம். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தூத்துக்குடியிலிருந்து வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது உப்பு உற்பத்தி பாதிப்பினால் குஜராத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

குஜராத்திலிருந்து 40 ஆயிரம் டன் உப்பு தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்களிடம் பேசினோம், “கடந்த ஆண்டு பெரும் மழையாலும் வெள்ளத்தாலும் உப்பு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உப்பளத் தொழிலாளர்களும் உப்பு உற்பத்தியாளர்களும் பொருளாதார இழப்பைச் சந்தித்தனர்.

இந்த ஆண்டும் பருவம் மாறி தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்க வேண்டிய உப்பு உற்பத்தி மே மாதம்தான் தொடங்கி உள்ளது.

தூத்துக்குடி உப்பளம்
தூத்துக்குடி உப்பளம்

குஜராத்திலிருந்து கப்பல்களில் 40 ஆயிரம் டன் எனக் கடந்த 6 மாத காலமாகத் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுவதால், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பருவம் தவறி அடிக்கடிப் பெய்த மழை, சாதகமில்லாத வானிலை, போதிய வெயில் இன்மை உப்பு போன்றவற்றால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உப்பளங்களில் உப்புத் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, வெயிலில் ஆவியாகும் நிலையில், மழை பெய்தால் அது உப்புத் தண்ணீரை நீர்த்துப்போகச் செய்து உப்பு விளைச்சலைக் கடுமையாகக் குறைகிறது.

இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்களிடம் சுமார் 100 டன் முதல் 200 டன் வரையிலும், பெரிய உப்பு உற்பத்தியாளர்களிடம் சுமார் 500 முதல் 1,000 டன் வரையிலான உப்பு விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளது.

தூத்துக்குடி உப்பளம்
தூத்துக்குடி உப்பளம்

இதனால், உப்பளத் தொழிலாளர்களும், உப்பு உற்பத்தியாளர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தூத்துக்குடி மாவட்டத்தின் முதன்மை தொழிலான உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை தொழிலும் இதனை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தூத்துக்குடியில் குஜராத் உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்க வேண்டும்” என்றனர்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Tamilnadu: "நாளை இந்தியா என்ன வாங்கும் என்பதை தெரிந்துகொள்ள கோவை, சென்னை செல்லுங்கள்" - கோத்ரேஜ் CEO

பெரிய பெரிய நிறுவனங்கள், வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை (FMCG) ஏன் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகின்றன என்ற கேள்விக்கு கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராட்கட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் சீதாபதி தனது லி... மேலும் பார்க்க

GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோரூம்

ஒவ்வொரு நகையும் ஒரு நினைவை சுமந்து கொண்டிருக்கும் என்னும் கருத்திற்கேற்ப, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இத்தகைய கோடிக்கணக்கான நினைவுகளின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. 1964-ஆம் ... மேலும் பார்க்க

நூற்றாண்டு கடந்த சிவகாசி பட்டாசு: புவிசார் குறியீடு வழங்கிட பட்டாசு உற்பத்தியாளர்கள் விண்ணப்பம்

’பட்டாசு’ என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். 1920-களில் சிவகாசி பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக மாற்றுத் தொழிலை உருவாக்கிட சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் மேற்கு வங்க மாநிலத... மேலும் பார்க்க

Taj: உலகத்தில் முதல்முறையாக சென்னையில் தாஜ் ரெசிடென்ஸி..!

நமக்கெல்லாம் தாஜ் என்றால் அது ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இனி தாஜ் என்றால் நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்புகளும் நினைவுக்கு வரும்.ஆம். சர்வதேச அளவில் முதல் முறையாக... மேலும் பார்க்க

Iphone: ஐபோன் உற்பத்தி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாறினால்... ஏற்படும் விளைவு என்ன?

மோடி தான் எனது நண்பர் என அடிக்கடி கூறும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை ஒரு நட்பு நாடாக கருதவில்லையோ என்பதுதான் அவரின் அறிவிப்பில் நமக்கு தெரிய வருகிறது.அதாவது இந்தியாவில் ஐபோன் தயாரிப்ப... மேலும் பார்க்க

'14 பசுமாடுகள், தினமும் 112 லிட்டர் பால், மாதம் ரூ.2 லட்சம்' - கலக்கும் இமாச்சலப் பிரதேசப் பெண்

இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள கூன் கிராமத்தைச் சேர்ந்தவர் சகீனா தாக்கூர். வரலாறு பட்டதாரியான இவர், மாட்டுச் சாணம் மற்றும் பால் விற்பனை மூலம் மாதம் இரண்டு லட்சம் வருமானம் ஈட்டும் தொழ... மேலும் பார்க்க