செய்திகள் :

Tamilnadu: "நாளை இந்தியா என்ன வாங்கும் என்பதை தெரிந்துகொள்ள கோவை, சென்னை செல்லுங்கள்" - கோத்ரேஜ் CEO

post image

பெரிய பெரிய நிறுவனங்கள், வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை (FMCG) ஏன் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகின்றன என்ற கேள்விக்கு கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராட்கட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் சீதாபதி தனது லிங்க்ட்இன் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது...

"சமீபத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் லிமிட்டெட் 'நிஞ்சா' (Ninja) என்கிற செல்லப்பிராணிகளின் உணவையும், 'பிளாக்' (Bloq) என்கிற ஒரு வித நறுமணத் திரவியத்தையும் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது.

இதற்கு முன்பும், நாங்கள் எங்களுடைய 'ஃபேப் லிக்விட் டிடர்ஜென்ட்' மற்றும் 'சிந்தால் பாடி வாஷை' தமிழ்நாட்டில்தான் அறிமுகம் செய்தோம்.

இன்னும் பல எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களும் தமிழ்நாட்டில்தான் தங்களுடைய பொருட்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

சுதிர் சீதாபதி
சுதிர் சீதாபதி

புதிய பொருட்கள் அறிமுகத்தின் ஃபேவரைட் இடமாகத் தமிழ்நாடு இருப்பதற்குக் காரணம் என்ன? அதற்கான மூன்று மிகப்பெரிய காரணங்கள் இதோ...

1. தமிழ்நாடு தென் கிழக்கு ஆசிய நாடுகளைப் போன்றது!

தமிழ்நாட்டின் வருமானம் என்பது மிகப் பெரியது. ஒட்டுமொத்த இந்தியாவின் சராசரி வருமானத்தை விட 1.6 மடங்கு பெரியது தமிழ்நாட்டின் வருமானம். இது கிட்டதட்ட இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளின் வருமானத்திற்கு ஒத்தது ஆகும்.

தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வளம் என்பது ஒரே ஒரு நகரத்தில்தான் கொட்டிக் கிடக்கும். ஆனால், தமிழ்நாட்டில் அது அனைத்து நகரங்களிலும் பரவலாக உள்ளது.

2. மீடியாக்களை எளிதாக அணுகலாம்

பெரிய பொருட்களின் அறிமுகத்திற்கு, தொலைக்காட்சி விளம்பரம் என்பது சிறந்த வழி. ஹரியானா போன்ற பிற பணக்கார மாநிலங்களில், அனைத்து இந்தி சேனல்களிலும் விளம்பரங்களை ஒளிபரப்பினால் மட்டுமே மக்களைச் சென்று சேர முடியும்.

கர்நாடகாவில் கூட, கன்னடம் பேசாத பல மக்கள் உள்ளனர். அவர்கள் கன்னட டிவி சேனல்களைப் பார்க்கமாட்டார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில், பெரும்பாலான மக்கள் தமிழ் பேசுவார்கள்... தமிழ் டிவி சேனல்களையும் பார்ப்பார்கள். அதனால், தமிழ்நாட்டில் வெறும் ஆறு வாரங்களில் 80 சதவிகித மக்களிடம் பொருட்களின் விளம்பரத்தைக் கொண்டு சேர்த்துவிடலாம்.

தமிழ்நாடு
தமிழ்நாடு

3. மாடர்ன் வர்த்தகம்

செல்ப்-சர்வீஸ் ஸ்டோர்களில் புதிய பொருட்கள் சிறப்பாகச் செயல்படும். காரணம், வாடிக்கையாளர்களை அவற்றைப் பார்த்து, பயன்படுத்தலாம். டி-மார்ட், ரிலையன்ஸ் போன்ற பெரிய ரீடைல் ஸ்டோர்களில் நமது புதிய பொருட்களைக் கொண்டு சேர்ப்பது சற்று கடினம். ஆனால், தமிழ்நாட்டில் பல சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன. அவற்றில் எளிதாக நமது பொருட்களைக் கொண்டு சேர்க்கலாம்.

இந்த மூன்றையும் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு. நாளை இந்திய மக்கள் என்ன வாங்குவார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, கோவை அல்லது சென்னைக்குச் செல்ல வேண்டியது மிக அவசியம்" என்று கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோரூம்

ஒவ்வொரு நகையும் ஒரு நினைவை சுமந்து கொண்டிருக்கும் என்னும் கருத்திற்கேற்ப, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இத்தகைய கோடிக்கணக்கான நினைவுகளின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. 1964-ஆம் ... மேலும் பார்க்க

நூற்றாண்டு கடந்த சிவகாசி பட்டாசு: புவிசார் குறியீடு வழங்கிட பட்டாசு உற்பத்தியாளர்கள் விண்ணப்பம்

’பட்டாசு’ என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். 1920-களில் சிவகாசி பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக மாற்றுத் தொழிலை உருவாக்கிட சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் மேற்கு வங்க மாநிலத... மேலும் பார்க்க

Taj: உலகத்தில் முதல்முறையாக சென்னையில் தாஜ் ரெசிடென்ஸி..!

நமக்கெல்லாம் தாஜ் என்றால் அது ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இனி தாஜ் என்றால் நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்புகளும் நினைவுக்கு வரும்.ஆம். சர்வதேச அளவில் முதல் முறையாக... மேலும் பார்க்க

Iphone: ஐபோன் உற்பத்தி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாறினால்... ஏற்படும் விளைவு என்ன?

மோடி தான் எனது நண்பர் என அடிக்கடி கூறும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை ஒரு நட்பு நாடாக கருதவில்லையோ என்பதுதான் அவரின் அறிவிப்பில் நமக்கு தெரிய வருகிறது.அதாவது இந்தியாவில் ஐபோன் தயாரிப்ப... மேலும் பார்க்க

'14 பசுமாடுகள், தினமும் 112 லிட்டர் பால், மாதம் ரூ.2 லட்சம்' - கலக்கும் இமாச்சலப் பிரதேசப் பெண்

இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள கூன் கிராமத்தைச் சேர்ந்தவர் சகீனா தாக்கூர். வரலாறு பட்டதாரியான இவர், மாட்டுச் சாணம் மற்றும் பால் விற்பனை மூலம் மாதம் இரண்டு லட்சம் வருமானம் ஈட்டும் தொழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை; துருக்கி ஆப்பிள், மார்பிளை புறக்கணிக்கும் மும்பை, ராஜஸ்தான் வியாபாரிகள்!

சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின் போது துருக்கி மற்றும் சீனா கொடுத்த ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதையடுத்து இந்திய மக்கள் துருக்கி பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்திருக்... மேலும் பார்க்க