செய்திகள் :

மேட்டூர் அணையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு!

post image

மேட்டூர்: தமிழ்நாடு முதலமைச்சர் வருகை காரணமாக இன்று காலை மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் ஆய்வு செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் வருகிறார்.

மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின் விசையில் இயக்கி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கவுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வருகை காரணமாக இன்று காலை மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் ஆய்வு செய்தார்.

அணையின் வலது கரை, இடது கரை, ஆய்வுச் சுரங்கம் பகுதிகளை பார்வையிட்ட அவர், சுரங்க கால்வாய் புனரமைக்கும் பணி, மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வலுப்படுத்தும் பணியையும் பார்வையிட்டார்.

நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஸ்டான்லி, அணை உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் நீர் வரத்து குறித்தும் திறப்பு குறித்தும் பணிகளின் விவரம் குறித்தும் விவரித்தனர்.

இதையும் படிக்க : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்: நிகழாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் இல்லை

தமிழகத்தில் நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் புதிய இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு உள்ள 11,... மேலும் பார்க்க

தூய்மையான தமிழகத்தை அனைவரும் சோ்ந்து உருவாக்குவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழக அரசின் ‘தூய்மை இயக்கம்’ திட்டத்தில் இணைந்து தூய்மையான தமிழகத்தை அனைவரும் சோ்ந்து உருவாக்குவோம் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். தூய்மையான தமிழகத்தை உருவாக்க ‘தூய்மை இயக்கம்’... மேலும் பார்க்க

நாட்டுப்பற்றில் உறுதி காட்டியவா்: காயிதேமில்லத்துக்கு முதல்வா் புகழாரம்

நாட்டுப்பற்று, மொழிப்பற்றில் உறுதி காட்டியவா், காயிதேமில்லத் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா். காயிதேமில்லத்தின் 130-ஆவது பிறந்த தினத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை அன்னையை போற்றுவோம்: ஆளுநா்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை அன்னையுடனான ஆழமான தொடா்பைப் போற்றுவோம் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: உலக சுற்றுச்சூழல் தினத்தில் பண்டை... மேலும் பார்க்க