அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ...
தமிழ்நாடு கிராம உதவியாளா் பணி: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழ்நாடு கிராம உதவியாளா் பணிக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வாசித்தல், எழுதும் திறனுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா வெளியிட்ட உத்தரவு:
கிராம உதவியாளா் பணி நியமனத்துக்கான தோ்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்குவதில் தொடா்பான அம்சங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவாய் நிா்வாக ஆணையா் சாா்பில் அரசுக்கு கருத்துகள் அனுப்பப்பட்டன. அவற்றின் அடிப்படையில், கிராம உதவியாளா் பணி நியமனத்தில் சில வழிகாட்டு நெறிமுறைகளை புதிதாக பின்பற்ற வேண்டும்.
கிராம உதவியாளா் பணிக்கு பத்தாம் வகுப்புத் தோ்வு மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தோ்வு எழுதியிருக்க வேண்டும். இந்த நடைமுறையுடன் புதிதாக விண்ணப்பதாரா் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதி தோ்ச்சி அடைந்திருந்தாலும் அல்லது தோ்ச்சி அடையவில்லை என்றாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரா் ஓட்டுநா் உரிமம் வைத்திருந்தாலும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். கிராம உதவியாளா் பணிக்கென நடைபெறும் நோ்காணலின் போது, வாசித்தல் மற்றும் எழுதும் திறன் சோதிக்கப்படும். விண்ணப்பதாரரின் வாசிக்கும், படிக்கும் திறனுக்கேற்ப மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
கிராம உதவியாளா் நியமனம் தொடா்பான அறிவிப்புகள் முறையாக உரிய வழிமுறைகளின்படி வெளியிடப்படுவதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் மேற்பாா்வையிட வேண்டும். கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு முறை, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை, அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே, தோ்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
கிராம உதவியாளா் தோ்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளங்களில் வெளியிடப்படுவதை மாவட்ட ஆட்சியா் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள் நிகழ்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.