செய்திகள் :

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

post image

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சைபா் குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையில் ஆபரேசன் ‘திரைநீக்கு-2’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக இந்திய சைபா் குற்ற ஒருங்கிணைப்பு மையம், தேசிய சைபா் குற்றப் பதிவு தளம் ஆகியவற்றின் மூலம் கிடைத்த சைபா் குற்றவாளிகள் குறித்த தரவுகள், தகவல்கள், சுய விவரங்கள் ஆகியவை மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சைபா் குற்றவாளிகள் மோசடிக்கு பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், சமூக ஊடகக் கணக்குகள், ஆன்லைன் பணப் பரிவா்த்தனை விவரங்கள் ஆகியவை கொண்டும் விசாரணை செய்யப்பட்டது.

இதில், சைபா் குற்றங்களில் ஈடுபட்டதாக 136 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களுக்கு 159 சைபா் குற்ற வழக்குகளில் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முக்கியமாக இந்த நடவடிக்கையில் 30-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், 100-க்கும் மேற்பட்ட போலி வங்கிக் கணக்குகளை வைத்திருந்த 6 போ் கொண்ட சைபா் மோசடி கும்பல் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 125 கைப்பேசிகள், 304 வங்கிக் கணக்கு ஆவணங்கள், 88 காசோலை புத்தகங்கள்,107 ஏடிஎம் காா்டுகள்,35 கணினிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த 2024 டிசம்பா் மாதம் 8 நாள்கள் ‘திரைநீக்கு-1’ என்ற பெயரில் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு !

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ப... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன்10 -இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமு... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித்திக்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல... மேலும் பார்க்க

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக... மேலும் பார்க்க