செய்திகள் :

வங்கியின் கதவை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்: எஸ்.ஐ.யின் செயல்பாட்டால் தப்பிய ரூ.50 லட்சம்!

post image

ஆவடி: ஆவடி, சிடிஹெச் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மரக்கதவை பூட்டாமல் ஊழியர்கள் சென்றனர். நள்ளிரவில் ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் கவனித்ததால், ரூ.50 லட்சம் ரொக்கம் தப்பியது.

ஆவடி சிடிஹெச் சாலையில் புதன்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில், ஆவடி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) முன்பக்க மரக்கதவு மற்றும் இரும்பு கதவு பூட்டப்படாமல் இருந்தது.

இதைப் பார்த்த உதவி ஆய்வாளர் சிவக்குமார் அதிர்ச்சியடைந்து, காவல் உயர் அதிகாரிகள் மற்றும் வங்கி மேலாளர் பூபாலன் ஆகியோருக்கு தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மேலாளர் பூபாலன் மற்றும் ஊழியர் சுரேந்தர் ஆகியோர் இரவு 12:30 மணியளவில் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது வங்கியில் எந்த அசம்பாவிதம் சம்பவமும் நடைபெறவில்லை என தெரியவந்தது. இதையடுத்து போலீஸôர், வங்கியின் கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை ஆய்வு செய்த போது, ஊழியர்கள் அலட்சியத்தால் முன்கதவை பூட்டாமல் சென்றது தெரியவந்தது.

உதவி ஆய்வாளர் சிவகுமார் உரிய நேரத்தில் கவனித்ததால், வங்கியில் இருந்த சுமார் ரூ.50 லட்சம் ரொக்கம் திருடு போகாமல் தப்பியது. இந்த கிளையில் 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் ரோந்து பணியின் போது சிறப்பாக செயல்பட்டு, திறந்து கிடந்த வங்கியில் பணம் திருடு போகாமல் தடுத்த உதவி ஆய்வாளர் சிவக்குமாரை, காவல் ஆணையர் கி.சங்கர் வெகுவாக பாராட்டினார்.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க