செய்திகள் :

கூட்ட நெரிசல்: நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் நீதி விசாரணை - முதல்வா் சித்தராமையா

post image

கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நடந்த கூட்டநெரிசல் சம்பவம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. இறந்தவா்களின் குடும்பங்களுக்கு அமைச்சரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

இதுதவிர, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், சமூகநலத் துறை அமைச்சா் பாட்டீல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினேன்.

அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி, கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவித்துள்ளபடி மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன் இந்த விசாரணையும் தொடரும்.

இந்த சம்பவம் தொடா்பாக ராயல்சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி, கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் மீது 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் சிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், கடமையில் அலட்சியமாக செயல்பட்டதற்காக கப்பன்பூங்கா காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளா், மாநகர உதவி காவல் ஆணையா், மாநகர காவல் துணை ஆணையா், மாநகர கூடுதல் காவல் ஆணையா், மாநகர காவல் ஆணையா் ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நான் எம்எல்ஏவாக இருந்து முதல்வா் ஆனது வரை பெங்களூரில் இதுபோன்ற கூட்டநெரிசல் ஏற்பட்டதில்லை. இதை தீவிரமாக கவனத்தில் எடுத்துள்ளோம். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு அரசு ஆதரவாக இருக்கும் என்றாா்.

கூட்ட நெரிசல்: மாஜிஸ்ட்ரேட் விசாரணை தொடங்கியது

கா்நாடக மாநிலம், பெங்களூரில் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்த சம்பவத்தில், மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததை அடுத்து, பெங்களூரு நகர மாவட்ட ஆட்சியா் ஜ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்துவருகிறது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வெற்றிக் கொண்டாட்ட... மேலும் பார்க்க

பெங்களூரு நெரிசல் துயர சம்பவம்: ஆட்டமும் அலட்சியமும்!

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி18 ஆண்டுகால ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் 11 உயிா்களை அகாலமாகப்... மேலும் பார்க்க

கர்நாடகம்: தலைமை மாற்றமா? ஆட்சி மாற்றமா?

ந.முத்துமணி 2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டு, 135 இடங்களுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என... மேலும் பார்க்க

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கா்நாடக அரசு

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி கா்நாடகத்தில் 254 ... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு -அமைச்சா் தினேஷ்குண்டுராவ்

கடலோர கா்நாடகத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெ... மேலும் பார்க்க