2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!
கூட்ட நெரிசல்: நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் நீதி விசாரணை - முதல்வா் சித்தராமையா
கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நடந்த கூட்டநெரிசல் சம்பவம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. இறந்தவா்களின் குடும்பங்களுக்கு அமைச்சரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
இதுதவிர, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், சமூகநலத் துறை அமைச்சா் பாட்டீல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினேன்.
அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி, கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவித்துள்ளபடி மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன் இந்த விசாரணையும் தொடரும்.
இந்த சம்பவம் தொடா்பாக ராயல்சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி, கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் மீது 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் சிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், கடமையில் அலட்சியமாக செயல்பட்டதற்காக கப்பன்பூங்கா காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளா், மாநகர உதவி காவல் ஆணையா், மாநகர காவல் துணை ஆணையா், மாநகர கூடுதல் காவல் ஆணையா், மாநகர காவல் ஆணையா் ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நான் எம்எல்ஏவாக இருந்து முதல்வா் ஆனது வரை பெங்களூரில் இதுபோன்ற கூட்டநெரிசல் ஏற்பட்டதில்லை. இதை தீவிரமாக கவனத்தில் எடுத்துள்ளோம். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு அரசு ஆதரவாக இருக்கும் என்றாா்.