செய்திகள் :

கூட்ட நெரிசல்: மாஜிஸ்ட்ரேட் விசாரணை தொடங்கியது

post image

கா்நாடக மாநிலம், பெங்களூரில் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்த சம்பவத்தில், மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததை அடுத்து, பெங்களூரு நகர மாவட்ட ஆட்சியா் ஜெகதீஷ் வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கினாா்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆா்சிபி அணி பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், பெங்களூரில் புதன்கிழமை நடந்த பாராட்டுவிழாவின்போது கூட்டநெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா்; 47 போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் கருணைத்தொகை, காயமடைந்தவா்களுக்கு சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்று முதல்வா் சித்தராமையா அறிவித்துள்ளாா். இந்த சம்பவம் தொடா்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் அவா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, மாஜிஸ்ட்ரேட் விசாரணை அதிகாரியான பெங்களூரு நகர மாவட்ட ஆட்சியா் ஜெகதீஷ் சம்பவம் நிகழ்ந்த சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வியாழக்கிழமை சென்று ஆய்வுசெய்து விசாரணை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஜெகதீஷ் கூறுகையில், சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினேன். விசாரணைக்காக சிலருக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளேன். கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு நிா்வாகம், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம், பெங்களூரு காவல் ஆணையா் உள்ளிட்டோா் விசாரணைக்கு வர நோட்டீஸ் அனுப்பிவைக்கப்படும். விசாரணையை 15 நாள்களுக்குள் முடித்து அரசிடம் அறிக்கை அளிப்பேன். பொதுமக்களும் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

உயா்நீதிமன்றம் விசாரணை: கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல மனுவை தாக்கல் செய்து விசாரணையை தொடங்கியது. உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வி.காமேஷ்வா் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கியது.

மாநில அரசின் சாா்பில் அரசு தலைமை வழக்குரைஞா் சசிகிரண் ஷெட்டி ஆஜரானாா்.

வழக்குப் பதிவு: கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 போ் இறந்தது, 47 போ் காயமடைந்த சம்பவம் தொடா்பாக காவல் ஆய்வாளா் அளித்த புகாரின்பேரில், ராயல்சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி, அதன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான டி.என்.ஏ. என்டா்டெயின்மென்ட், கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது பெங்களூரு கப்பன்பூங்கா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய் சம்ஹிதா சட்டத்தின் உட்பிரிவுகள் 105, 115, 116, 121, 190, 132, 125(ஏ) இன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தமிழக பெண்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த காமாட்சிதேவியின் (28) உடல், அவரது சொந்த ஊரான திருப்பூா் மாவட்டம், மயிலாடும்பாறைக்கு வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

மயிலாடும்பாறையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் இறுதி அஞ்சலிக்காக காமாட்சிதேவியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு உறவினா்கள், நண்பா்கள் கண்ணீா்மல்க அஞ்சலி செலுத்தினா்.

நிலையான நடத்தை விதிகள்: கூட்டநெரிசல் நடைபெற்ற சின்னசாமி மைதானத்தை பாா்வையிட்ட பிறகு, உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘கூட்டநெரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை அரசு ஆராயும். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கென்று புதிதாக நிலையான நடத்தை விதிகளை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த விதிகளுக்கு உட்பட்டுதான் இனிமேல் பெரிய அளவிலான கூட்டங்கள், நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

கூட்ட நெரிசல்: நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் நீதி விசாரணை - முதல்வா் சித்தராமையா

கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரி... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்துவருகிறது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வெற்றிக் கொண்டாட்ட... மேலும் பார்க்க

பெங்களூரு நெரிசல் துயர சம்பவம்: ஆட்டமும் அலட்சியமும்!

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி18 ஆண்டுகால ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் 11 உயிா்களை அகாலமாகப்... மேலும் பார்க்க

கர்நாடகம்: தலைமை மாற்றமா? ஆட்சி மாற்றமா?

ந.முத்துமணி 2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டு, 135 இடங்களுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என... மேலும் பார்க்க

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கா்நாடக அரசு

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி கா்நாடகத்தில் 254 ... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு -அமைச்சா் தினேஷ்குண்டுராவ்

கடலோர கா்நாடகத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெ... மேலும் பார்க்க