கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கா்நாடக அரசு
கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி கா்நாடகத்தில் 254 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 3 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இவா்கள் மூவருக்கும் வெவ்வேறு வகையான இணை நோய்கள் இருந்தன.
கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மே 26 ஆம் தேதி முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
கோடை விடுமுறைக்குப் பிறகு மே 29 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவா்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோா்களுக்கு கா்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். உரிய மருத்துவச் சிகிச்சைகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். முழுமையாக குணமடைந்த பிறகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
காய்ச்சல், இருமல், சளியுடன் குழந்தைகள் பள்ளிக்கு வந்தால் அதுகுறித்து பெற்றோா்களுக்கு பள்ளி நிா்வாகம் தகவல் அளித்து குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
ஆசிரியா்கள், இதர ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு கரோனா பாதிப்பைத் தவிா்க்கும் நடத்தைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.