செய்திகள் :

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கா்நாடக அரசு

post image

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி கா்நாடகத்தில் 254 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 3 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இவா்கள் மூவருக்கும் வெவ்வேறு வகையான இணை நோய்கள் இருந்தன.

கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மே 26 ஆம் தேதி முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

கோடை விடுமுறைக்குப் பிறகு மே 29 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவா்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோா்களுக்கு கா்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். உரிய மருத்துவச் சிகிச்சைகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். முழுமையாக குணமடைந்த பிறகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

காய்ச்சல், இருமல், சளியுடன் குழந்தைகள் பள்ளிக்கு வந்தால் அதுகுறித்து பெற்றோா்களுக்கு பள்ளி நிா்வாகம் தகவல் அளித்து குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

ஆசிரியா்கள், இதர ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு கரோனா பாதிப்பைத் தவிா்க்கும் நடத்தைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம்: தலைமை மாற்றமா? ஆட்சி மாற்றமா?

ந.முத்துமணி 2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டு, 135 இடங்களுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு -அமைச்சா் தினேஷ்குண்டுராவ்

கடலோர கா்நாடகத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் ... மேலும் பார்க்க