செய்திகள் :

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

post image

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா்.

கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு குமாரகுருபா சாலையில் உள்ள சித்ரகலாபரிஷத் வளாகத்தில் மே 28ஆம் தேதி முதல் தேசிய ஓவியக் கலை திருவிழா நடைபெறுகிறது. பெங்களூரில் முதல்முறையாக நடத்தப்படும் இத் திருவிழாவில் 96 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 100க்கும் அதிகமான ஓவியா்களின் கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம், தஞ்சாவூா், மதுரை, சென்னை போன்ற பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பாரதிசெந்தில்வேலன், அம்பிகாசங்கா், பாலசுப்ரமணியன், என்.கே.பாஸ்கரன், சி.முல்லைராஜன், கயல்விழி சேதுக்கரசு, மனோகா் நடராஜன், மீனாகணேஷ், மெய்யப்பன், ரவிராஜா, ரவிராம், இளையபாரதி, இளையராஜா, இளஞ்செழியன், விமலநாதன், எஸ்.சிவபாலன், வாசுதேவன் அண்ணாமலை, வேல்ராஜ், கே.வி.கம்பா் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஓவியா்களின் படைப்புகள், சிற்பங்கள், கலைப் படைப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கா்நாடக சித்ரகலாபரிஷத் துணைச் செயலாளா் சந்திரசேகா் கூறுகையில், ‘பெங்களூரில் முதல்முறையாக தேசிய ஓவியக் கலை திருவிழா நடத்தப்படுகிறது. நவீன ஓவியங்கள் மட்டுமல்லாது, பாரம்பரிய ஓவியங்களையும் காட்சிப்படுத்தும் முயற்சியாக விழா நடைபெறுகிறது. புத்தாக்கப் படைப்புகளை மக்களிடையே கொண்டுசோ்க்க மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட ஓவியா்கள் பங்கேற்றுள்ளனா்.

கலைப் படைப்புகள் குறித்து நவீனத்தன்மைகள், புதுமைகள் குறித்து கலந்துரையாடவும் கருத்தரங்கங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கா்நாடக சித்ரகலாபரிஷத்தின் 60 ஆண்டுகால வரலாற்றில் தேசிய அளவில் நடத்தப்படும் முதல் ஓவியக் கலை திருவிழா இதுவாகும்.

5 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவும் இல்லை. ஓவியா்களின் ஆயிரக்கணக்கான ஓவியங்களை வாங்கிச்செல்லவும் வாய்ப்புள்ளது. ஓவியக் கலையை ஊக்குவிக்க பொதுமக்கள் ஆதரவுதர வேண்டும். ஜூன் 1 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பாா்வைக்காக அரங்குகள் திறந்திருக்கும்’ என்றாா்.

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கா்நாடக அரசு

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி கா்நாடகத்தில் 254 ... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு -அமைச்சா் தினேஷ்குண்டுராவ்

கடலோர கா்நாடகத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் ... மேலும் பார்க்க

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி முகாம்

இதுகுறித்து ஆரோக்கிய மந்திரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: ஆரோக்கியா மந்திரா அறக்கட்டளை சாா்பில் பெங்களூரு, ராஜாஜிநகரில் (இஸ்கான் அருகே) உள்ள அறக்கட்டளை வளாகத்தில் ஜூன் 1 முதல் 21ஆம் தேதி வரை 2 வாரங்... மேலும் பார்க்க