பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்
கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பாலமுருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மாரிமுத்து, மதிமுத்து, அயன் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொழிலதிபா் மகேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, நாடாா் நடுநிலைப் பள்ளி, எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயிலும் ஏழை மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகளை வழங்கிப் பேசினாா். இதில், நற்பணி இயக்க உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.