செய்திகள் :

Bengaluru: `எங்களுக்கு கன்னடர்களை பிடிக்கும்’ - ஆட்டோ ஓட்டுரை அடித்ததற்காக மன்னிப்பு கேட்ட பெண்

post image

சாலையில் நடந்த வாக்குவாதத்தின்போது ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண், மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.06.2025) அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

"We Really Love Bengaluru"

"நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள், நான் கர்ப்பமாக இருக்கிறேன். கரு கலைந்துவிடுமோ என்ற பயத்தில் அப்படிப் பேசிவிட்டேன். எனக்கு உண்மையாகவே பெங்களூரூவைப் பிடிக்கும். கன்னட மொழியையும் கன்னடர்களையும் பிடிக்கும். எங்களுக்கு பெங்களூரூவின் கலாசாரம் பிடிக்கும்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

மேலும், "அனைத்து கன்னடர்களும் எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் ஆட்டோ ஓட்டுநர்களை மதிக்கிறோம். எங்களுக்கு பெங்களூரூ மிகவும் விருப்பமானது." என்றும் கைகளை வணங்கி பேசியுள்ளார்.

அந்த வட இந்தியப் பெண்ணும் அவரது கணவரும், கன்னட மொழியிலும் மன்னிப்புக் கேட்க வற்புறுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து சுற்றியிருந்தவர்கள் கன்னடம் சொல்லித்தர அதைக் கேட்டு அந்த மொழியிலேயே மன்னிப்பும் கேட்டனர்.

பின்னணி என்ன?

பெங்களூரூவில் உள்ள பெல்லந்தூர் பகுதியில், சனிக்கிழமை மாலை சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராரில் அந்த பெண் ஆட்டோ ஓட்டுநரை அடித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் லோகேஷ் காவல்துறையில் அளித்துள்ள புகாரின்படி, சாலையில் லோகேஷ் வலதுபுறம் இருந்தும் அந்தப் பெண் இடதுபுறமிருந்தும் வந்துள்ளனர். பாதை இணையும் இடத்தில் லோகேஷின் ஆட்டோவும், அந்த பெண்ணின் இரு சக்கர வாகனமும் மிக நெருக்கமாக சென்றிருக்கிறது.

வாகனங்கள் இடித்துக்கொள்ளவில்லை என்றாலும் அந்தப் பெண் லோகேஷை சரமாரியாக கத்தவும் திட்டவும் தொடங்கியுள்ளார். லோகேஷ் இதனை மொபைலில் ரெக்கார்ட் செய்ய முயன்றபோது அவரை காலணியால் தாக்கியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது.

`வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை' - குற்றவாளிகளை பிடிக்க `சூனிய சடங்கு' செய்யப்பட்டதா?

கர்நாடகா மாநிலம் விஜயபுர மாவட்டம் பசவனபாகேவாடியில் செயல்படுகிறது கனரா வங்கி. இந்த வங்கியில் 58 கிலோகிராம் மதிப்புள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளி... மேலும் பார்க்க

சென்னை: 'பேசவே முடியாதவர் பாடும் அதிசயம்!' - விழிச்சவால் கொண்ட முதல் ஓதுவார் பிரியவதனா யார்?

சென்னை, திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் கோயிலில் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரியவதானாவுக்கு ஓதுவார் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைத் தொடர்ந்த அவர் கோயிலில் பாடும் க... மேலும் பார்க்க

Makeup: ஆள் அடையாளம் தெரியாமல் திணறிய ஃபேஸ் ஸ்கேனர்: கண்டித்த விமான நிலைய அதிகாரி; நடந்தது என்ன?

ஒரு காலத்தில் மேக்கப் தேவை இல்லை இயற்கை அழகே அழகு எனப் பேசப்பட்டது. ஆனால், கால ஓட்டத்தில் மேக்கப் என்பது என் தனி உரிமை. அதை நான் விரும்பும் வகையில் போட்டுக்கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது என உரிமைக் ... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ஜன்னல் வழியே ரூபாய் நோட்டு கட்டுகளை வீசிய அதிகாரி - என்ன நடந்தது?

ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் பைகுந்த நாத் சாரங்கி. இவர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டுவருவதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதனால... மேலும் பார்க்க

Rachel Gupta: ``நேர்மை, சுயமரியாதைக்காக.." - உலக அழகிப் பட்டத்தை துறந்த ரேச்சல் குப்தா சொல்வதென்ன?

ரேச்சல் குப்தா (Rachel Gupta), பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர். 2022-ம் ஆண்டு 'Miss Super Talent of the World' பட்டத்தை வென்ற இவர், 2024 அக்டோபர் 25-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற உலக அழகிப்போட்டி... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற தம்பதி: திடீரென இறந்த மனைவி; `இதயம் காணவில்லை எனப் புகார்' - என்ன சொல்கிறது துருக்கி?

இங்கிலாந்திலிருந்து துருக்கிக்கு பெத் மார்ட்டின் - லூக் மார்ட்டின் தம்பதி விமானத்தில் சுற்றுலா புறப்பட்டிருக்கிறார்கள். அப்போதே பெத் மார்ட்டினுக்கு உடல்நலமில்லாமல் இருந்திருக்கிறது. ஃபுட் பாயிசன் ஆகிய... மேலும் பார்க்க