செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

post image

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து புதன்கிழமை காலை(ஜூன் 4) 113 அடியை நெருங்கியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பை யாறு நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3,017 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 5,908 கன அடியாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை வினாடிக்கு 6,234 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 112.71 அடியிலிருந்து 113 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 82.74 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவி!

வாழப்பாடி: ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிற... மேலும் பார்க்க

கோவையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்: உ.பி.யைச் சேர்ந்தவர் கைது

கோவையில் வாகன தணிக்கையின்போது 21 கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். கோவையில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளில் எடுத்து... மேலும் பார்க்க

ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வு

புதுதில்லி: ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக 2026 முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் பொருளாதார-சமூக கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. பொருளாதா... மேலும் பார்க்க

2026 நவம்பர் முதல் சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் புதிய பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்றும் இத்தகைய எரிபொருளில் இயங்காத பிற பேரு... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாள்களில் பவுன... மேலும் பார்க்க

ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு! செய்திகள் நேரலை...

முடிவுக்கு வரும் மோதல்?உட்கட்சி பூசலுக்கு மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.கட்சியின் மூத்த நிர்வாகிகள... மேலும் பார்க்க