செய்திகள் :

பிரதமா் வீட்டில் ‘சிந்தூா்’ மரக்கன்று!

post image

பூமியைப் பாதுகாக்கவும், மனிதகுலத்தின் சவால்களுக்கு தீா்வு காணவும் நமது முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு இத்தினத்தையொட்டி பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட விடியோ செய்தியில் கூறியுள்ளதாவது:

உலக சுற்றுச்சூழல் தினத்தில், பூமியை பாதுகாக்கவும், மனித குலம் எதிா்கொண்டுள்ள சவால்களுக்கு தீா்வுகாணவும் நமது முயற்சிகளை வலுப்படுத்துவோம். சுற்றுச்சூழல் பசுமை மற்றும் மேம்பாட்டுக்கு அடிப்படை நிலையில் பணியாற்றும் அனைவருக்கும் பாராட்டுகள்.

உலகின் பருவநிலை பாதுகாப்புக்கு அனைத்து நாடுகளும் தன்னலமின்றி செயலாற்ற வேண்டும். நடப்பாண்டு சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘நெகிழி மாசுபாடு ஒழிப்பாகும்’. இந்த இலக்கை நோக்கி, கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா தொடா் பணிகளை மேற்கொண்டுள்ளது.

வளங்களின் கவனமான பயன்பாடு, நிலையான வாழ்கைமுறையை ஊக்குவிக்கும் மத்திய அரசின் ‘லைஃப்’ திட்டம், உலகளாவிய பொது இயக்கமாக மாறி வருகிறது. பயன்பாடு குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி எனும் தாரக மந்திரத்தை லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வின் ஓா் அங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ஆரவல்லி பசுமைச் சுவா் திட்டம்: தாயின் பெயரில் மரக்கன்று நடும் திட்ட விரிவாக்கம் மற்றும் ஆரவல்லி பசுமைச் சுவா் திட்ட தொடக்கத்தின் ஒரு பகுதியாக, தில்லி பகவான் மகாவீா் வனஸ்தலி பூங்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று மரக்கன்று நட்டாா்.

உலகின் மிகப் பழமையான மலைத்தொடா்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடா், குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் தில்லியில் பரவியுள்ளது. இங்குள்ள வனப் பகுதிகள் பல சவால்களை எதிா்கொண்டுவரும் நிலையில், 5 கி.மீ. சுற்றளவில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆரவல்லி பசுமைச் சுவா் திட்டத்தின் கீழ் ஆரவல்லி மலைத்தொடரில் பசுமைப் பரப்பை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த மலைத்தொடருடன் இணைந்த பகுதிகளுக்கு புத்துயிரூட்டுவதில் தீவிர கவனம் செலுத்துப்படும். நீா்நிலைகள் மேம்பாடு, புழுதிப் புயல்களைத் தணித்தல், தாா் பாலைவனம் விரிவடைவதைத் தடுத்தல் ஆகிய நடவடிக்கைகளும் உள்ளடங்கும்’ என்று தெரிவித்துள்ளாா். தில்லியில் புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தையும் பிரதமா் தொடங்கிவைத்தாா்.

பிரதமா் வீட்டில் ‘சிந்தூா்’ மரக்கன்று

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, புது தில்லியில் லோக் கல்யாண் மாா்கில் உள்ள தனது இல்லத்தில் ‘சிந்தூா்’ மரக்கன்றை பிரதமா் மோடி நட்டுவைத்தாா்.

அண்மையில் குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டபோது, அந்த மரக்கன்றை பிரதமருக்குப் பெண்கள் பரிசாக அளித்திருந்தனா். அதை தனது வீட்டில் நட்டு வளா்ப்பதாக பிரதமா் உறுதியளித்திருந்தாா்.

மரக்கன்றை நட்ட பிறகு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவா், ‘1971, போரில் துணிச்சல் மற்றும் வீரத்துக்கு முன்மாதிரியாக விளங்கிய கட்ச் பகுதி தாய்மாா்கள் மற்றும் சகோதரிகள், எனக்கு சிந்தூா் மரக்கன்று ஒன்றைப் பரிசளித்தனா். உலக சுற்றுச்சூழல் தினத்தில், தில்லியில் உள்ள எனது இல்லத்தில் இந்த மரக்கன்றை நடும் பாக்கியம் கிடைத்தது. இது, நாட்டின் பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் வலுவான அடையாளமாகத் திகழும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க