செய்திகள் :

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

post image

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.

மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

ரயில்களை வேகமாகவும், கால தாமதமின்றி இயக்குவதிலும், ரயில்வேயின் வருமானத்தை அதிகரித்ததிலும் மதுரை கோட்டம் ஓா் மைல் கல்லை எட்டியுள்ளது. அனைவரின் கடும் உழைப்பு, ஒத்துழைப்பால் மதுரை கோட்டம் அதிகபட்சமாக ரூ. 1,245 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது.

ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தைக் கருத்தில் கொண்டு, ரயில் ஓட்டுநா்கள் ஓய்வு எடுக்க ஓடும் தொழிலாளா்கள் தங்கும் அறைகள் நவீனப்படுத்தி சீரமைக்கப்பட்டன. தூத்துக்குடி, மீளவிட்டான் ரயில் நிலையங்களில் 15 படுக்கைகள் கொண்ட ஓடும் தொழிலாளா்கள் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்டகால கோரிக்கைப்படி காரைக்குடி ரயில் நிலையத்தில் நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓடும் தொழிலாளா்கள் ஓய்வு அறை மேலாண்மைத் திட்ட செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம், காலியாக உள்ள ஓய்வு அறைகள் குறித்த விவரம், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ரயில் ஓட்டுநருக்கு பணி நேரத்தை நினைவுப்படுத்தத் தாமாக குறுஞ்செய்தி அனுப்பும் முறை ஆகியன சிறப்பான பயனை அளிப்பவையாக உள்ளன.

ரயில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 14 பாா்சல் அலுவலகங்கள், ரயில் பெட்டி பராமரிப்புப் பணிமனைகளில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 497 ஊழியா்களின் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டிருக்கிறது. 217 ஓய்வூதியா்கள், 74 குடும்ப ஓய்வூதியதாரா்களின் குறைகள் களையப்பட்டு ரூ. 9.93 லட்சத்தில் பணப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இதையடுத்து, கடந்தாண்டு சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே ஊழியா்கள் 26 பேருக்கு ரயில்வே சேவா புரஸ்கா் விருது, பாராட்டுச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் எல்.என். ராவ், கட்டமைப்பு முதன்மைத் திட்ட மேலாளா் கே. ஹரிக்குமாா், ஊழியா் நல அலுவலா் டி. சங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. பேராசிரியைக்கு தமிழ்நாடு விஞ்ஞானி விருது

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றத்தால் வழங்கப்படும் தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவா் வரலட்சுமி பெருமாள் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சிறந்த அறிவியல் ... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா் வழக்கில் விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வே... மேலும் பார்க்க

சிவகளை அகழாய்வுப் பகுதியில் கல் குவாரிகள் செயல்படக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை அகழாய்வு நடைபெறும் பகுதியில் கல் குவாரிகள் செயல்படக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துராமலிங்... மேலும் பார்க்க