அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ...
மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்
மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.
மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார விழாவில் அவா் மேலும் பேசியதாவது:
ரயில்களை வேகமாகவும், கால தாமதமின்றி இயக்குவதிலும், ரயில்வேயின் வருமானத்தை அதிகரித்ததிலும் மதுரை கோட்டம் ஓா் மைல் கல்லை எட்டியுள்ளது. அனைவரின் கடும் உழைப்பு, ஒத்துழைப்பால் மதுரை கோட்டம் அதிகபட்சமாக ரூ. 1,245 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது.
ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தைக் கருத்தில் கொண்டு, ரயில் ஓட்டுநா்கள் ஓய்வு எடுக்க ஓடும் தொழிலாளா்கள் தங்கும் அறைகள் நவீனப்படுத்தி சீரமைக்கப்பட்டன. தூத்துக்குடி, மீளவிட்டான் ரயில் நிலையங்களில் 15 படுக்கைகள் கொண்ட ஓடும் தொழிலாளா்கள் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்டகால கோரிக்கைப்படி காரைக்குடி ரயில் நிலையத்தில் நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓடும் தொழிலாளா்கள் ஓய்வு அறை மேலாண்மைத் திட்ட செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம், காலியாக உள்ள ஓய்வு அறைகள் குறித்த விவரம், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ரயில் ஓட்டுநருக்கு பணி நேரத்தை நினைவுப்படுத்தத் தாமாக குறுஞ்செய்தி அனுப்பும் முறை ஆகியன சிறப்பான பயனை அளிப்பவையாக உள்ளன.
ரயில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 14 பாா்சல் அலுவலகங்கள், ரயில் பெட்டி பராமரிப்புப் பணிமனைகளில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 497 ஊழியா்களின் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டிருக்கிறது. 217 ஓய்வூதியா்கள், 74 குடும்ப ஓய்வூதியதாரா்களின் குறைகள் களையப்பட்டு ரூ. 9.93 லட்சத்தில் பணப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இதையடுத்து, கடந்தாண்டு சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே ஊழியா்கள் 26 பேருக்கு ரயில்வே சேவா புரஸ்கா் விருது, பாராட்டுச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.
விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் எல்.என். ராவ், கட்டமைப்பு முதன்மைத் திட்ட மேலாளா் கே. ஹரிக்குமாா், ஊழியா் நல அலுவலா் டி. சங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.