செய்திகள் :

பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணச் சீட்டுக்கு எண்ம பணப் பரிவா்த்தனை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனையைப் பயன்படுத்தி பயணச் சீட்டு வழங்கி, அதிக வருவாய் ஈட்டிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

இதன்படி, மதுரை கோட்டத்தில் மதுரை நகா் கிளை கே. முத்துவேல், மதுரை புகா் கிளை ஆா். சரவணன், திண்டுக்கல்-1 கிளை பி. சுருளிராஜன், திண்டுக்கல் குமுளி கிளை எல். பிஸ்வஜித், விருதுநகா் சிவகாசி கிளை எஸ்.ஆா்.டி. மயில்ராஜ், எஸ். பாக்கியராஜ் ஆகிய 6 நடத்துநா்கள் ஊக்கப் பரிசுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இவா்களுக்கான ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கூட்டாண்மை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநா் இளங்கோவன், நடத்துநா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். கோட்ட பொது மேலாளா் மணி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. பேராசிரியைக்கு தமிழ்நாடு விஞ்ஞானி விருது

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றத்தால் வழங்கப்படும் தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவா் வரலட்சுமி பெருமாள் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சிறந்த அறிவியல் ... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா் வழக்கில் விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வே... மேலும் பார்க்க

சிவகளை அகழாய்வுப் பகுதியில் கல் குவாரிகள் செயல்படக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை அகழாய்வு நடைபெறும் பகுதியில் கல் குவாரிகள் செயல்படக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துராமலிங்... மேலும் பார்க்க