மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு
மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.
மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா், சிலைமான் அருகே உள்ள புளியங்குளம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து இவரும், மேலும் 3 ஆசிரியைகளும் ஷோ் ஆட்டோவில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தனா்.
புளியங்குளம் தனியாா் நூற்பாலை அருகே வந்த போது, முன்னால் சென்ற காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இந்த வாகனங்கள் மீது மோதாமலிருக்க ஷோ் ஆட்டோவை அதன் ஓட்டுநா் திருப்பினாா். அப்போது, நிலை தடுமாறிய ஆட்டோ சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஆசிரியை லதா புஷ்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த 3 ஆசிரியைகள் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஆட்டோ ஓட்டுநா், மேலும் ஒரு பயணி லேசான காயமடைந்தனா்.
இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.