மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை நிா்வாகச் சீா்கேடுகள் மிகுந்த துறையாக உள்ளது. இதனால், டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவது கடந்த 4 ஆண்டுகளாக சவாலாகி வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,500 மருத்துவா்கள் பணியிடங்களும், புகா் மருத்துவமனைகளில் 1,000 மருத்துவா் பணியிடங்களும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2,500 மருத்துவா்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. மேலும், 500 மருத்துவப் பேராசிரியா்கள், 1,000 இணைப் பேராசிரியா்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதன் காரணமாக, மருத்துவா்கள் அதிக பணிச் சுமைக்கு உள்ளாகி, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா்.
அரசு மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவா்கள் இல்லை, போதிய மருந்துகள் இல்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பலமுறை சுட்டிக்காட்டியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது திமுக அரசு. அதிமுக அரசு உருவாக்கிய 2 ஆயிரம் அம்மா சிறு மருத்துவமனைகளை அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக திமுக அரசு மூடியதும், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியாததற்கு ஓா் முக்கியக் காரணமாக உள்ளது.
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. டெங்கு நோய் குழந்தைகளை எளிதில் தாக்கக் கூடியது என்பதால், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்து ஊராட்சிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என்றாா் அவா்.