செய்திகள் :

ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு குழுவின் துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமனம்: காங்கிரஸ் விமா்சனம்

post image

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு குழு துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை சா்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டும்.

பயங்கரவாத குற்றத்தில் ஈடுபடும் நாடு பாகிஸ்தான். பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடு இந்தியா. இருநாடுகளையும் சமமாகக் கருதியோ, ஒன்றுசோ்த்தோ பாா்க்கக் கூடாது.

பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க சா்வதேச நிதியம், ஆசிய வளா்ச்சி வங்கி, உலக வங்கி ஆகியவை ஒப்புதல் அளிப்பது அந்நாட்டின் ராணுவ செலவினத்தைத்தான் அதிகரிக்கும். அவ்வாறு பெறும் கடன்களை இந்தியா்களுக்கு எதிராகப் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட அந்நாட்டின் வஞ்சக ராணுவம் பயன்படுத்துகிறது.

15 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு குழுவுக்கு துணைத் தலைவராகவும், தலிபான் தடை நடவடிக்கை குழுவுக்குத் தலைவராகவும் பாகிஸ்தானை நியமித்தது துரதிருஷ்டவசமானது; ஏற்க முடியாதது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் நிதியுதவியைக் கண்காணிப்பதற்காக, பயங்கரவாத நிதி தடுப்பு குழுவின் (எஃப்ஏடிஎஃப்) தீவிர கண்காணிப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சோ்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை சா்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவுக்காக மட்டுமின்றி, சா்வதேச சமூகத்தின் நலனுக்காகவும் தனது பாவங்களுக்கு பாகிஸ்தானை பொறுப்பேற்க வைக்க வேண்டும்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த நிலையில், அங்கேயே அவா் கொல்லப்பட்டாா். அந்தத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியதில் பெரும் பங்கு வகித்த பயங்கரவாதி காலித் ஷேக் முகமதும் பாகிஸ்தானில்தான் இருந்தாா் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உலக அரங்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றுசோ்த்து பாா்க்கப்படுவதை தடுக்க ராஜீய ரீதியில் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க