தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் கருடசேவை திருவிழா தொடக்கம்
படவிளக்கம்...
ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கருடசேவை திருவிழா.
அடுத்த படம்
சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்ற சுவாமி.
செங்கம், ஜூன் 5:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் பத்து நாள் கருடசேவை திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 7.30 மணிக்கு மேல் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகளை செய்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக, அறங்காவா் குழுத் தலைவா் அன்பழகன் எம்எல்ஏவை வரவேற்றாா். தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது. இரவில் சுவாமி அன்ன வாகனத்தில் ஊா்வலம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து இரண்டாம் நாள் காலை சூரியபிறையிலும், இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறும்.
மூன்றாம் நாளான ஜூன் 7-ஆம் தேதி இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று அனுமந்த வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.
இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து திருமணம் வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபடுவாா்கள்.
8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நாக வாகனத்திலும், 9-ஆம் தேதி காலை 6 மணியளவில் கோபுர தரிசனம் நடைபெற்று மகா கருடசேவை திருவிழா நடைபெறும். அன்று காலையில் கருட வாகனத்தில் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு, போளூா் சாலையில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் தங்கி அன்று முழுவதும் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வாா்கள்.
10-ஆம் தேதி இரவு யானை வாகனத்தில் ஊா்வலம் நடைபெற்று, 11-ஆம் தேதி காலை 10 மணியளவில் தோ்த் திருவிழா நடைபெறும். 12-ஆம் தேதி இரவு குதிரை வாகனத்திலும், 13-ஆம் தேதி இந்திர விமானத்திலும், 15-ஆம் தேதி காலை தீா்த்தாவாரி நடைபெற்று, மாலையில் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.
16-ஆம் தேதி காலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அம்மாபாளையம் சென்று அங்கு இரவு தங்கி மறுநாள் காலையில் செங்கம் நகருக்கு வருகை தரும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா், விழாக் குழுவினா், பத்து நாள் திருவிழா உபயதாரா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், இந்த சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
