செய்திகள் :

2026 நவம்பர் முதல் சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி

post image

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் புதிய பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்றும் இத்தகைய எரிபொருளில் இயங்காத பிற பேருந்துகள் தில்லிக்குள் அனுமதிக்கப்படாது காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) தெரிவித்துள்ளது.

தில்லி மற்றும் அதனையொட்டிய பகுதிகளை தூய்மையான இயக்கத்திற்கு மாறுவதை விரைவுபடுத்தும் நோக்கிலும், பழைய மற்றும் மாசுபடுத்தும் பேருந்துகள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2026 நவம்பர் 1-ஆம் தேதி முதல் சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் புதிய பேருந்துகள் மட்டும் தில்லிக்குள் அனுமதிக்கப்படும். இத்தகைய எரிபொருளில் இயங்காத பிற பேருந்துகள் வரும் 2026 ஜனவரி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படாது.

அனைத்து இந்திய அனுமதி, ஒப்பந்த வாகனம், கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி அனுமதிகள் பெற்று, தில்லிக்குள் நுழையும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பேருந்துகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

தில்லியில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளுக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது?

தில்லியில் உள்ள மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்கள், விநியோக சேவை வழங்குநர்கள் மற்றும் மின் வணிக நிறுவனங்கள், சிஎன்ஜி, மின்சார மூன்று சக்கர ஆட்டோ ரிக்‌ஷாக்களை தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர்களின் தொகுப்பில் சேர்க்க வேண்டும்.

பழைய நான்கு சக்கர இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்பட வழக்கமான வாகனங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அவற்றின் தற்போதைய வாகனக் குழுவில் சேர்க்கப்படாது.

தானியங்கி வாகன பதிவெண் அடையாளம் காணும் அமைப்பு மற்றும் ரேடியோ அலைவரிசை அடையாள முறைகள் (ஆர்எஃப்ஐடி) மூலம் எல்லைகளில் பேருந்துகளைக் கண்காணிக்குமாறு தில்லி போக்குவரத் துறை மற்றும் போக்குவரத்து காவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதிய விதியின் குறித்து தங்கள் மாநிலத்தில் உள்ள பேருந்து நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு மாநில அரசுகளுக்கு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கரோனா: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவும் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எ... மேலும் பார்க்க

டிரம்ப் - மஸ்க் இடையே முற்றும் மோதல்: செய்திகள் நேரலை!

ரெப்போ வட்டி குறைவுரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் நிலையில், 6 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமானது.ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் 0.25 சதவிகித... மேலும் பார்க்க

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவி!

வாழப்பாடி: ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிற... மேலும் பார்க்க

கோவையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்: உ.பி.யைச் சேர்ந்தவர் கைது

கோவையில் வாகன தணிக்கையின்போது 21 கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். கோவையில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளில் எடுத்து... மேலும் பார்க்க

ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வு

புதுதில்லி: ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக 2026 முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் பொருளாதார-சமூக கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. பொருளாதா... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாள்களில் பவுன... மேலும் பார்க்க