செய்திகள் :

புதிய கட்சித் தொடங்கும் எலான் மஸ்க்? 81% பேர் ஆதரவு!

post image

அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க் புதிய கட்சித் தொடங்குவது தொடர்பாகத், தனது எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் பொதுவெளியில் வெடித்து சர்வதேச அளவில் பெரும் பேசுப் பொருளாகியுள்ளது.

2024-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டார் டெஸ்லா நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க்.

அதன்பின்னர், ஆட்சியில் அமர்ந்த அதிபர் டிரம்ப் அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறையை உருவாக்கி அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக்கினார்.

இவை அனைத்தும், இருவருக்கும் இடையிலான புதியதொரு நட்பை, உலகளவில் எடுத்துச் சென்ற நிலையில் அதிபர் டிரம்ப்பின் சில புதிய முடிவுகள் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வந்தன.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததோடு, டிரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து அவர் விலகினார்.

இந்த மாற்றமானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தற்போது பொதுவெளியிலேயே கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஓரு பகுதியாக, பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ஜெஃப்ரி எப்ஸ்டைனின் ஆவணங்களில் அதிபர் டிரம்ப்பின் பெயர் இருப்பதாகத் தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டது புதிய பூகம்பத்தையே உருவாக்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தது. இத்துடன், அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள புதிய வரி மசோதாவினால், நிதியாண்டின் இரண்டாவது பாதியில் மிகப் பெரியளவிலான பாதிப்புகள் உருவாகும் எனவும் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது எக்ஸ் தளத்தில், அமெரிக்காவின் 80 சதவிகித நடுத்தர மக்களின் பிரதிநிதியாக ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டதா? என்று எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

அந்த வாக்கெடுப்பில் சுமார் 81 சதவிகிதம் பேர் ‘ஆம்’ என வாக்களித்துள்ளனர். மேலும், 19 சதவிகிதம் ‘இல்லை’ எனும் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அவ்வப்போது, தனது புதுப்புது செயல்களினால் சர்வதேச அளவில் ரசிகர்களையும், விமர்சகர்களையும் பெற்றுள்ள எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்டார். ஆனால், அவர் தனது பதவி விலகியபோது மஸ்க்கின் ஆதரவாளர்கள் டிரப்புக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கத் துவங்கினர்.

தற்போது, டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கி துணை அதிபர் ஜேடி வேன்ஸ்-ஐ அதிபராக்க வேண்டும் என்ற கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவுத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெருவாரியான ஆதரவு அவருக்கு கிடைத்துள்ள நிலையில் விரைவில் எலான் மஸ்க் புதிய கட்சி ஒன்றை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

மேலும் படிக்க...

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க