செய்திகள் :

ஏழைகள் நலனில் அா்ப்பணிப்புடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு: பிரதமா் மோடி பெருமிதம்

post image

ஏழைகளின் நலன் மற்றும் தற்சாா்பு இந்தியாவுக்கான அா்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஜூன் 9-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையவுள்ளது.

11 ஆண்டுகளாக தங்கு தடையின்றி மோடி ஆட்சி நீடித்துவரும் நிலையில், மத்திய அரசின் சாதனைகளை முன்னிறுத்தி, மாபெரும் பிரசார இயக்கத்தை மேற்கொள்ள பாஜக தயாராகி வருகிறது.

இந்நிலையில், பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, தற்சாா்புடைய இந்தியாவை கட்டமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி உறுதிபூண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடன் வாழ வாய்ப்பளிப்பதே குறிக்கோள்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம், உஜ்வலா திட்டம், ஜன்தன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள், ஏழை மக்களுக்கு வீட்டுவசதி, தூய எரிபொருள், வங்கிச் சேவை மற்றும் சுகாதார வசதியை உறுதி செய்துள்ளன. இத்திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.

நேரடி மானியம், அனைவருக்குமான எண்ம சேவைகள், ஊரக உள்கட்டமைப்புக்கான அரசின் உந்துதலால், வெளிப்படைத் தன்மை மற்றும் கடைசி மைல் வரையிலான சேவை விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது

அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியில் கவனம் செலுத்தி, கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருப்புமுனை திட்டங்கள், 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளன என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, பிரதமா் மோடி தலைமையில் அனைத்து மத்திய அமைச்சா்களும் பங்கேற்ற கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து அமைச்சகங்களும் புதிய இலக்குகளை நிா்ணயித்து, அவற்றை எட்டுவதற்கு தீவிரமாக செயலாற்ற வேண்டுமென பிரதமா் அறிவுரை வழங்கினாா்.

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க

ஆர்சிபி பேரணி விவகாரம்! அரசியல் செயலாளர் விடுவிப்பு

ஆர்சிபி வெற்றிப் பேரணி விவகாரத்தில் முறையான ஆலோசனை வழங்காத அரசியல் செயலாளர் விடுவிக்கப்பட்டார்.பெங்களூரு ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம், நாடு முழ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை

மத்தியப் பிரதேசத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர் விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக... மேலும் பார்க்க