செய்திகள் :

RCB : 'சட்டமன்றம் டு சின்னசாமி ஸ்டேடியம்; ரோடு ஷோ நடத்தும் ஆர்சிபி!' - அப்டேட் என்ன?

post image

'பெங்களூரு சாம்பியன்...'

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியிருந்தது. 18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி வெல்லும் முதல் கோப்பை இது. இந்தத் தொடரை விராட் கோலிக்காக வெல்ல வேண்டும் என பெங்களூரு அணி லட்சியம் கொண்டிருந்தது.

விராட் கோலி
விராட் கோலி

இந்நிலையில், பெங்களூரு அணி வெற்றிக் கோப்பையுடன் பெங்களூருவில் ரோடு ஷோ நடத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

'கோலி நெகிழ்ச்சி!'

பெங்களூருவின் வெற்றி உறுதியான தருணத்திலேயே மகிழ்ச்சியில் கோலி ஆனந்த கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டார். வெற்றிக்குப் பிறகும் ரொம்பவே நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். 'என்னுடைய இளமை, உச்சக்கட்ட ஆட்டம், அனுபவம் என எல்லாவற்றையும் இந்த அணிக்காக கொடுத்திருக்கிறேன். என்னுடைய இதயம் ஆன்மா எல்லாமே பெங்களூருவுக்குதான்.

RCB
RCB

என்னுடைய கரியரின் கடைசி நாள் வரைக்கும் இந்த அணிக்காக மட்டுமே ஆடுவேன்.' எனக் கூறியிருந்தார். மேலும் பேசியவர், 'கெய்லும் டீவில்லியர்ஸூம் இந்த அணிக்காக தங்களின் உயிரைக் கொடுத்து அர்ப்பணிப்போடு ஆடியிருக்கிறார்கள். இது அவர்களுக்குமான வெற்றிதான். அவர்களும் நாளை எங்களோடு பெங்களூரு வர வேண்டும்.' என்றார்.

Kohli
Kohli

இந்நிலையில், பெங்களூரு அணி சார்பில் ரோடு ஷோ நடத்தவிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். பெங்களூருவின் சட்டசபையிலிருந்து தொடங்கும் இந்த ரோடு ஷோ சின்னசாமி ஸ்டேடியத்தில் முடிவடைகிறது. மாலை 3:30 மணி முதல் ரோடு ஷோவை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

'இதெல்லாம் உங்களுக்கு பெருமையா சிவக்குமாரே? - பெங்களூரு கூட்ட நெரிசலும் நுண் அரசியலும்! - ஓர் அலசல்!

'பெங்களூரு கூட்ட நெரிசல்!'ஐ.பி.எல் யை ஆர்சிபி அணி வென்றதற்காக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான பேர் காயம்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின... மேலும் பார்க்க

Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்...' - பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!

ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் ... மேலும் பார்க்க

RCB: "இத்தனை ஆண்டுகள் தந்த ஏமாற்றங்களுக்கும் ஆறுதல் தரும்" - விராட் கோலி நெகிழ்ச்சி

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி.ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாகக் கோப்பையை வென்று தங்களுடைய 18 வருடக... மேலும் பார்க்க

RCB: "நான் பெங்களூரு அணியை தொடங்கியபோது..." - கோப்பையை வென்றது குறித்து விஜய் மல்லையா

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையைத் தன் வசப்படுத்தியிருக்கிற... மேலும் பார்க்க