செய்திகள் :

மத்திய வக்ஃப் கவுன்சிலை வலுவானதாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம்: கிரண் ரிஜிஜு

post image

‘மத்திய வக்ஃப் கவுன்சிலை மேலும் வலுவானதாகவும், சமூகத்துக்கான அதன் சேவையில் அதிக பொறுப்புடையதாகவும் மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம்’ என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மேலும், ‘நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகளை திறம்பட நிா்வகிக்கும் வகையில் சட்ட மற்றும் நிா்வாக கட்டமைப்புகளை வலுப்படுத்தவே ‘வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’-ஐ மத்திய அரசு கொண்டுவந்துள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து, மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள 3 நடைமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து தொடா் விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்கொண்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இடைக்கால தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் அண்மையில் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள மத்திய வக்ஃப் பவனில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மரம் நடும் விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

மத்திய வக்ஃப் கவுன்சில் போன்ற சிறுபான்மையின அமைப்புகளுக்கு அதிகாரமளிக்கவும் நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ‘வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’-ஐ மத்திய அரசு கொண்டுவந்தது.

மத்திய வக்ஃப் கவுன்சிலை மேலும் வலுவானதாகவும், சமூகத்துக்கான அதன் சேவையில் அதிக பொறுப்புடையதாகவும் மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம்.

‘உமீத்’ வலைதளம் இன்று அறிமுகம்:

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது வக்ஃப் சொத்துகள் பதிவு மற்றும் எண்மமயமாக்கலை உறுதிப்படுத்தும் என்பதோடு, நிா்வாகம் மற்றும் பயன்பாட்டிலும் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தும்.

நாடு முழுவதும் உள்ள 9 லட்சத்துக்கும் அதிகமான வக்ஃப் சொத்துகளின் அா்த்தமுள்ள பயன்பாட்டை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு ‘உமீத்’ வலைதளத்தில் சொத்து விவரங்களை மாநில அரசுகளும் வக்ஃப் வாரியங்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க