செய்திகள் :

RCB: "நான் பெங்களூரு அணியை தொடங்கியபோது..." - கோப்பையை வென்றது குறித்து விஜய் மல்லையா

post image

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையைத் தன் வசப்படுத்தியிருக்கிறது பெங்களூரு அணி.

RCB
RCB

கோப்பையை வெல்வது ஆர்.சி.பி அணியினருக்கு கிட்டத்தட்ட 18 வருடக் கனவு. அந்தக் கனவு நனவான ஆனந்தத்தில் போட்டி முடிந்த பிறகு கோலி உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆர்.சி.பி அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா பெங்களூரு அணியை வாழ்த்தி பதிவிட்டிருக்கிறார்.

அவர், "நான் ஆர்சிபியைத் தொடங்கியபோது, ஐ.பி.எல் கோப்பை பெங்களூருக்கு வரவேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இளம் வீரராக இருந்த கிங் கோலியைத் தேர்ந்தெடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

மேலும், அவர் 18 ஆண்டுகளாக ஆர்சிபியுடன் இருந்து வந்திருக்கிறார். யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் மற்றும் மிஸ்டர் 360 ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் கௌரவமும் எனக்குக் கிடைத்தது.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

அவர்கள் ஆர்சிபி வரலாற்றில் அழியாத பகுதியாக உள்ளனர். இறுதியாக, ஐ.பி.எல் கோப்பை பெங்களூருக்கு வந்துவிட்டது.

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும். ஆர்சிபி ரசிகர்கள் மிகச் சிறந்தவர்கள்; அவர்கள் ஐ.பி.எல் கோப்பையைத் தகுதியுடன் பெறுகிறார்கள். ஈ சாலா கப் பெங்களூரு வருதே!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

'இதெல்லாம் உங்களுக்கு பெருமையா சிவக்குமாரே? - பெங்களூரு கூட்ட நெரிசலும் நுண் அரசியலும்! - ஓர் அலசல்!

'பெங்களூரு கூட்ட நெரிசல்!'ஐ.பி.எல் யை ஆர்சிபி அணி வென்றதற்காக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான பேர் காயம்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின... மேலும் பார்க்க

Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்...' - பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!

ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் ... மேலும் பார்க்க

RCB: "இத்தனை ஆண்டுகள் தந்த ஏமாற்றங்களுக்கும் ஆறுதல் தரும்" - விராட் கோலி நெகிழ்ச்சி

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி.ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாகக் கோப்பையை வென்று தங்களுடைய 18 வருடக... மேலும் பார்க்க

RCB : 'சட்டமன்றம் டு சின்னசாமி ஸ்டேடியம்; ரோடு ஷோ நடத்தும் ஆர்சிபி!' - அப்டேட் என்ன?

'பெங்களூரு சாம்பியன்...'ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியிருந்தது. 18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி வெல்லும் முதல் கோப்பை ... மேலும் பார்க்க